டிராவிட் சார் ஓகே சொன்னால் ஓகேதான்.. என் வாழ்க்கை மாறியது அந்த ஒரு நிமிடத்தில்தான் – சஞ்சு சாம்சன் பேட்டி

0
159
Samson

தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்திய வீரர் சஞ்சு சாம்சன் கேப்டனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தன்னை ராகுல் டிராவிட் தேர்ந்தெடுத்தது பற்றி பேசி இருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு இளம் வீரராக உள்ளே வந்து, அச்சம் இல்லாமல் விளையாடி பேட்டிங் திறனை வெளிப்படுத்தி, இன்று அந்த அணிக்கு கேப்டனாகவும் உயர்ந்திருக்கிறார். மேலும் அவர் தலைமையில் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் முன்னேற்றத்தில் ஸ்ரீசாந்த்

கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சனை ஐபிஎல் தொடருக்குள் கொண்டு வந்தவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த்தான். அவரது வாய்ப்புக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பேசி அவரை பயிற்சிக்கு முகாமுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தனக்கு முதன் முதலில் என்ன நடந்தது என்பது பற்றி பேசி இருக்கும் சஞ்சு சாம்சன் இறுதியாக ராகுல் டிராவிட் தன்னை எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்பது குறித்து கூறியிருக்கிறார். மேலும் அந்த இடத்தில் தான் அவருடைய மொத்த கிரிக்கெட் வாழ்க்கையும் மாற ஆரம்பித்தது.

- Advertisement -

ராகுல் டிராவிட் சார் ஓகே சொன்னால் ஓகேதான்

இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறும் பொழுது ” நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் சோதனை முகாம் நடந்தது. அங்கு என்னை ஸ்ரீசாந்த் பாய் அழைத்துச் சென்றார்.அங்கு ராகுல் டிராவிட் சார், பேடி அப்டன் மற்றும் ஜுபின் பருச்சா சார் ஆகியோர் இருந்தார்கள்.

இதற்கு முன்பாக நான் கொல்கத்தா சோதனை முகாமுக்கு சிறுவயதில் சென்று இருக்கிறேன். இதனால் அதிகப்படியான சோதனைகள் செய்வார்கள் என்று நினைக்கவில்லை. மேலும் அவர்களுக்கு என்ன தேவை என்பது கூட எனக்குத் தெரியாது. நான் இரண்டு நாட்கள் அந்தபயிற்சி சோதனை முகாமில் இருந்தேன்.

இதையும் படிங்க : ஸ்பின்னரா சொல்றேன்.. விராட் கோலி இந்த விஷயத்தை சரி பண்ணனும்.. இல்லனா கஷ்டம் – ஓஜா அட்வைஸ்

அப்பொழுது என்னிடம் ராகுல் டிராவிட் சார் வந்து ‘நீங்கள் நிச்சயமாக சிறப்பான ஒன்றை செய்கிறீர்கள். எங்கள் அணிக்காக விளையாட விரும்புகிறீர்களா’ என்று கேட்டார். எல்லா வகையான கிரிக்கெட்டிலும் ஜாம்பவானாக இருந்த அவர் என்னிடம் வந்து கேட்டது என் நம்பிக்கையை அதிகரித்தது. அவரைப் போன்ற ஒருவர் வந்து நான் தகுதியானவன் என்று சொன்னால் நான் தகுதியானவன்தான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -