இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சர்ச்சையான முறையில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த ஆண்டு அடுத்த மாதம் இந்திய அணி ஜூன் இருபதாம் தேதி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் தொடராக இரண்டு அணிகளுக்கும் இந்த தொடர் அமைகிறது.
எதிர்பார்க்காத முடிவு
இந்திய டெஸ்ட் அணி ரோகித் சர்மா தலைமையில் உள்நாட்டில் மோசமான முறையில் விளையாடி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய அடியாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு ஒன்று என இழந்தது. மேலும் இந்திய அணி விளையாடிய விதமும் தோல்வியடைந்த விதமும் விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் அமைந்தது. இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது.
மஞ்ச்ரேக்கர் விமர்சனம்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவின் கடைசி 15 டெஸ்ட் இன்னிங்ஸ் களின் பேட்டிங் புள்ளி விபரங்கள் மோசமான முறையில் அமைந்திருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மறைமுகமான முறையில் அவரது ஓய்வை விமர்சனம் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : 72 பந்துகள்.. ரிஷப் பண்ட்டுக்கு நடந்திருக்கும் பெரும் சோகம்.. வரலாறு காணாத பரிதாபம்
இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது ” ரோகித் சர்மா தனது கடைசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் 15 இன்னிங்ஸ்களில் எடுத்த ரன்கள் 164 மட்டும்தான். இதில் கடைசி பத்து டெஸ்ட் இன்னிங்ஸ்கள் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் அமைந்தவை. அவருடைய ரன் ஆவரேஜ் 10. 9 மட்டுமே. எனவேதான் ஒரு ஓய்வை அறிவித்து விட்டார்” என்று மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார்.