கேஎல் ராகுல் இதெல்லாம் ஒரு பேட்டிங்கா.. முதல்ல அந்த விஷயம் உங்ககிட்ட இருக்கா – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
109
Rahul

நேற்று பங்களாதேஷ் அங்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல்.ராகுல் ஆட்டம் இழந்த விதம் எல்லோரையும் சலிப்படைய வைத்திருக்கிறது. இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச் ரேக்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடித்திருக்கும் கேஎல்.ராகுல் அவருக்கே உரிய தரத்தில் விளையாடாமல் பல நேரங்களில் அணியை ஏமாற்றி விடுவார். அவர் எந்த நேரத்தில் பார்மில் இருக்கிறார் இல்லை என்று யாருக்கும் தெரியாது. இது எப்பொழுதும் இந்திய அணிக்கு பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

ரோகித் சர்மாவின் நம்பிக்கை

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேஎல்.ராகுல் சிறந்த பேட்ஸ்மேன் என்றும், கிரிக்கெட் வாழ்க்கை எல்லோருக்குமே சுமூகமாக அமைவதில்லை, ஏற்றத்தாழ்வுகள் இருக்கும், எனவே நாம் அதை புரிந்து கொண்டு, நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்தை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் கேஎல்.ராகுலிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவது தம்முடைய பெரிய கடமை என்றும் கூறியிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடர் விளையாடும் இந்திய அணியில் கேஎல்.ராகுல் பங்கு பெரியதாக பார்க்கப்படுகிறது. எனவே அவருக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வாய்ப்பையும் நம்பிக்கையும் கொடுக்க வேண்டியது முக்கியமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

- Advertisement -

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

இந்த நிலையில் கேஎல்.ராகுல் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது “கேஎல்.ராகுலுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி புரிந்து கொள்ள முடிகிறது. அவரிடம் சிறந்த தரம் மற்றும் அனுபவம் இருக்கிறது. கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் தென் ஆப்பிரிக்காவில் சிறப்பாக விளையாடினார். அதற்கு முன்பு திடீரென அவர் விளையாடுவது கிடையாது. இதுதான் கேஎல்.ராகுல் உடைய கதையாக இருக்கிறது.மேலும் அவர் பேக்கிங் செய்வதை பார்க்கும் பொழுது எந்த நோக்கமும் இல்லாதது போல இருக்கிறது.

இதையும் படிங்க : 104 ரன்ஸ்.. கோலியின் அரிதான சாதனையை முறியடித்த பாபர் அசாம்.. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கப் 2024

கேஎல்.ராகுல் விளையாடிய 50 டெஸ்ட் போட்டிகளாக அவரை மனோபாவ பிரச்சனை துரத்தி வந்தது.அவர் மன உறுதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். அவர் விளையாடுவதற்கு கடினமான இடங்களில் சில சதங்களை அடித்திருந்த பொழுதும், அவருடைய டெஸ்ட் ஆவரேஜ் 34 என்பது, அவருக்கு இருக்கும் பிரச்சனையை தெளிவாகச் சொல்லும். அவருக்கு மன உறுதி சார்ந்த பிரச்சினை இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -