நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் பேட்டிங் மிகவும் மோசமான முறையில் அமைந்திருக்கிறது. இப்போது இதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேசியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி 128 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இவருடைய ரன் சராசரி 12.80 ஆகும். மேலும் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 100 கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஐபிஎல் வரலாற்றில் இந்த ஆண்டு மிக மோசமானதாக அமைந்திருக்கிறது.
நான் கவனித்தது இதைத்தான்
இந்த நிலையில் சிறந்த அதிரடி டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருக்கக்கூடிய ரிஷப் பண்ட், அவருக்கு ஏற்ற வகையிலான 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் மோசமான முறையில் செயல்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், ஐபிஎல் தொடரில் அவரால் சாதிக்க முடியாதது ஏன்? எனவும் சஞ்சய் பாங்கர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சஞ்சய் பாங்கர் பேசும்பொழுது “ரிஷப் பண்ட் இன்னும் வெள்ளை பந்து கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று புரிந்து கொள்ளவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் ஒரு அற்புதமான டெஸ்ட் பேட்டராக இருந்து வருகிறார். அதில் குறை சொல்ல எதுவும் இல்லை. அதே சமயத்தில் அவர் இந்த முறை ஐபிஎல் தொடரில் பின்புறமாக பந்தை விளையாட முயற்சி செய்து அதிக முறை ஆட்டம் இழந்ததை நான் கவனித்தேன்”
பிரச்சனையின் புள்ளி இதுதான்
“நீங்கள் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடிய சீசனில் எங்கு ரன்கள் அடித்தார் என்று பார்க்கும் பொழுது, அவர் நேராகவும், கவர் திசையிலும், மிட் விக்கெட் திசையிலும் ரன்கள் அடித்தார். மேலும் தரையில் அடித்து விளையாட நினைத்த பொழுது அவர் மிகவும் சிறப்பான முறையில் இருந்திருக்கிறார்”
இதையும் படிங்க : ரோகித்த பயமுறுத்திட்டாங்க.. அந்த நாள் வெளிவந்த ஒரு நியூஸ்தான் ஓய்வுக்கு காரணம் – ஆதர்டன் கருத்து
“நீங்கள் அதிக முறை தரையோடு பந்தை அடித்து ரங்கள் எடுக்க முயற்சி செய்யும்பொழுது உங்களுக்கு எல்லா பக்கங்களும் திறக்கிறது. ஆனால் நீங்கள் பின்புறமாக மட்டுமே ரன் அடிக்க முயற்சி செய்யும் பொழுது நீங்கள் வசமாக சிக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் ரன்கள் எடுப்பதற்கான பொசிஷனில் இல்லாமல் போகிறீர்கள்” என்று கூறியிருக்கிறார்.