இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததற்கு பின்னால் என்ன காரணம் இருக்கலாம் என்று இங்கிலாந்து அணி என் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கூறி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பாக ரோகித் சர்மா திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி இந்திய டெஸ்ட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென பரவிய செய்தி
ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்திய டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா தொடர மாட்டார் அவர் நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்ற செய்தி வேகமாக பரவியது. அதே சமயத்தில் இந்திய டெஸ்ட் அணியில் சாதாரண வீரராக ரோகித் சர்மா தொடர்வதற்கு வாய்ப்புகள் உண்டு என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக கூட பும்ராவை இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்ற செய்தியும் பரவியது. மேலும் ஒரு பயிற்சியாளராக கம்பீர் நிலைத்தன்மை கொண்ட இளம் கேப்டனுடன் செயல்பட விரும்புவார் எனவும், எனவே அடுத்த கேப்டனாக கில் வருவதற்கான வாய்ப்புகள் வந்துவிட்டது என்றும் கூறப்பட்டது.
ரோகித் சர்மா ஓய்வுக்கு காரணம்
இது குறித்து மைக்கேல் ஆதர்டன் பேசும் பொழுது ” இது முற்றிலும் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவா, இல்லை அவரை அணியிலிருந்து நீக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததால் எடுக்கப்பட்ட முடிவா என்றும் தெரியவில்லை. ஏனென்றால் இவர் ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அவரை இந்திய அணியில் இருந்து நீக்குவதாக செய்திகள் வர ஆரம்பித்தது. இதுதான் அவரை ஓய்வை நோக்கி தள்ளி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : உலக கிரிக்கெட்ல இதை செய்ற கடைசி ஆள் விராட் கோலியா இருக்கணும்.. ப்ளீஸ் ஓய்வு வேண்டாம் – ரசிகர்கள் வலியுறுத்தல்
“இறுதியில் என்ன நடந்தது என்று நமக்கு யூகமாக மட்டுமே தெரியும் இறுதியாக தெரியாது. ஆனாலும் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் ரோகித் சர்மாவுக்கு மோசமானவர் கலவை அமைந்திருந்தது. அவருடைய தலைமையில் கடைசி ஆறு போட்டிகளில் இந்தியா ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. மேலும் அவருடைய தனிப்பட்ட பேட்டி மிகவும் மோசமாக இருந்தது. இது உண்மையில் ஒருவருக்கு மோசமான காம்பினேஷன் ஆகும். எனவே அவருடைய ஓய்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை” என்று கூறி இருக்கிறார்.