டெஸ்ட் கேப்டனா கோலி அந்த தப்ப செஞ்சிட்டார்.. அதுதான் என் மனசுல எப்பவும் இருக்கு – இந்திய முன்னாள் கோச் பேட்டி

0
80
Virat

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து 68 போட்டிகளில் விராட் கோலி 40 வெற்றிகளை பெற்று, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக தன் பெயரை பதிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவி விலகல் குறித்து பேசி இருக்கிறார்

சஞ்சய் பாங்கர் இடைக்காலத்தில் இந்திய அணிக்கு ஒரு முறை மேனேஜராகவும், அடுத்து ரவி சாஸ்திரி பயிற்சியாளராக வந்த பொழுது பேட்டிங் பயிற்சியாளராகவும் இந்திய அணிக்கு தொடர்ந்து இருந்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் எழுச்சி

இந்திய அணி வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட செல்லும் பொழுது பொதுவாக போட்டிகளை வென்றாலும் தொடரை வெல்லக்கூடிய அணியாக இருந்தது கிடையாது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கட்டாயம் இந்திய அணி வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை வெல்லும் என நம்பி இருந்த காலம் விராட் கோலியின் தலைமையில் கீழ்தான் வந்தது.

விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை கொடுத்தார். அதுபோலவே உடல் தகுதியிலும் கண்டிப்பாக காட்டினார். மேலும் எல்லா சூழ்நிலையிலும் டெஸ்ட் போட்டியை வெல்வதற்காக விளையாட வேண்டும் மனநிலையை உருவாக்கினார். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எழுச்சியை உருவாக்கியவர் கேப்டனாக விராட் கோலி என்று பலராலும் கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார்.

- Advertisement -

விராட் கோலி அதை செய்திருக்கக் கூடாது

இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறும் பொழுது “விராட் கோலி இந்தியா டெஸ்ட் அணிக்கு 68 போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். எனவே அவர் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். மேலும் அவர் நீண்ட காலத்திற்கு கேப்டனாகவே இருந்திருக்க வேண்டும் என்பதும் நான் உணரும் ஒன்றாக இருக்கிறது.

வெளிநாட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்கின்ற உண்மையான உந்துதல் விராட் கோலிக்கு இருந்தது. மேலும் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவுக்கு வருகின்ற எதிரணிகளுக்கு எதிராக இந்திய அணி 75% போட்டிகளில் வெற்றி பெறும்.இந்தியா உள்நாட்டில் தோல்வி அடைய வேண்டும் என்றால் மிக மோசமாக விளையாடினால் மட்டுமே அது நடக்கும்.

இதையும் படிங்க : என் மனைவி சொன்னாங்க.. நாங்க அவங்க இடத்துல பாகிஸ்தான் அணியை தோற்கடிச்சோம் – பங்களாதேஷ் கேப்டன் பேட்டி

விராட் கோலி தன்னுடைய மகத்தான உடல் தகுதியை அடைந்தார். அவர் தனிப்பட்ட முறையில் உடல் வரம்புகளுக்கு சவால் கொடுத்தார்.அவர் மிகவும் கடினமாக உழைத்ததோடு கேப்டனாக அந்த காலகட்டத்தில் அணிக்கு நிறைய ரன்களையும் எடுத்த பேட்ஸ்மேன் ஆகவும் இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -