ஒரே போன்ல சாம்சன் என் வாழ்க்கைய மாத்தினாரு.. அவரு பெரிய மனுஷன் – சந்தீப் சர்மா நெகிழ்ச்சி

0
159
Sanju

2022ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் தன்னை எந்த அணியும் வாங்காத பொழுது சஞ்சு சாம்சன் தான் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பி வருவதற்கு எப்படியான உதவிகள் செய்தார்? என்பது குறித்து சந்தீப் சர்மா கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா துரதிஷ்டவசமாக காயமடைந்தார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் யாரும் வாங்காத சந்தீப் சர்மாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 லட்ச ரூபாய்க்கு இணைத்துக் கொண்டது. ஆனால் இதற்கு முன்பாகவே சஞ்சு சாம்சன் சந்தீப் சர்மாவை தொடர்பு கொண்டு பேசிய விஷயம் தற்பொழுது தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

சந்தீப் சர்மா ஐபிஎல் வரலாறு

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் இந்திய வேகப் பந்து வீச்சாளர்களில் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் பலராலும் குறிப்பிட்டு சொல்லும் வீரர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் சப்தமே இல்லாமல் இவர்களுக்கு இணையாக 126 இன்னிங்ஸ்களில் 137 விக்கெட் கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளராக சந்தீப் சர்மா இருக்கிறார்.

பந்தை ஸ்விங் செய்யக்கூடிய புதிய பந்தில் வீசக்கூடியவராக இருந்து வந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் தான் வாங்கப்படாமல் போய் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பிய பிறகு, யார்க்கர் மற்றும் மெதுவான பந்துகளில் வேலை செய்து இறுதிக்கட்ட ஓவர்களை மிகச் சிறப்பாக வீசக்கூடிய பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார்.

- Advertisement -

பாசிட்டிவாக பேசிய ஒரே ஆள்

தற்போது சஞ்சு சாம்சன் பற்றி சந்தீப் சர்மா கூறும் பொழுது “சஞ்சுவிடமிருந்து எனக்கு போன்-கால் வந்தது. அவர் நிறைய பாசிட்டிவான விஷயங்களை சொன்னார். தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் விற்கப்படாமல் போனது எவ்வளவு வருத்தமாக இருந்தது என்பது குறித்தும் கூறினார். ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் குறித்து விளக்கினார். மேலும் எனக்கு நிச்சயம் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும், நான் சிறப்பாக செயல்படுவேன் என்றும் கூறினார்”

இதையும் படிங்க: இனி ரிங்கு சிங் பினிஷர் இல்லை.. இந்த 2 பேர்தான் பினிஷர்கள்.. நிலைமை மாறிடுச்சு – தினேஷ் கார்த்திக் பேட்டி

“அந்த நேரத்தில் என்னை பாசிட்டிவாக உணர வைத்த ஒரே நபர் சஞ்சு சாம்சன் மட்டும்தான். அது எனக்கு நிறைய உதவியது. அந்த நேரத்தில் அவர் மட்டுமே என்னுடன் பேசினார். பின்னர் அவர் என்னை ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சி முகாமுக்கு அழைத்தார். பின்னர் நான் உள்ளே வந்தேன். அப்பொழுது துரதிஷ்டவசமாக பிரசித் கிருஷ்ணா காயம் அடைய எனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதல் இப்பொழுது வரை நான் அவருடன் இணைந்து விளையாடி வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -