இந்திய டி20 அணியில் பினிஷர் ஆக ரிங்கு சிங் இருந்து வந்த நிலையில், தற்போது அந்த இடத்திற்கு வேறு புதிய இரண்டு வீரர்கள் பினிஷர்களாக இருப்பார்கள் என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
இந்திய அணி இன்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் யார் இந்திய அணிக்கு பினிஷர் ரோலில் களமிறங்கி விளையாடுவார்கள் என்பது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
தோனிக்கு அடுத்து ரிங்கு சிங்
சுனில் கவாஸ்கர் போன்ற இந்திய லெஜெண்ட் முன்னாள் வீரர்கள் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்து சிறந்த பினிஷர் ஆக ரிங்கு சிங் இருப்பார் என தொடர்ந்து கூறி வந்தார்கள். கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு அவரை தேர்வு செய்யப்பட விட்டாலும் கூட, எதிர்காலத்தில் அவரே இந்திய டி20 அணியில் ஃபினிஷர் ஆக இருப்பார் என்று கூறப்பட்டது.
தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ரிங்கு சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில் அவருக்கு கடந்த ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் அமையவில்லை. கொல்கத்தா அணியில் பேட்டிங் ஆர்டரில் அவருடைய பினிஷர் இடத்திற்கு வேலையே வரவில்லை. மேலும் சுதாரித்து கம்பீர் அவரை கடைசியில் மேலே அனுப்பிய போதும் அவரிடமிருந்து ரன்கள் வரவில்லை.
இனி இவர்கள் இருவரே ஃபினிஷர்கள்
இந்திய டி20 அணியில் பினிஷர் பற்றி பேசிய தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “இந்திய டி20 அணியில் ஃபினிஷர்களாக ரியான் பராக் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு நிறைய நேரம் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா ஃபினிஷர் ஆக சிறந்தவர். அவர் போட்டிகளை அந்த இடத்தில் விளையாடி வென்று இருக்கிறார். குஜராத் அணிக்காக மேலே சென்று விளையாடியும் இருக்கிறார். ஆனால் அவரை ஒரு ஃபினிஷர் ஆக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பார்க்கும் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட்.. பாகிஸ்தான் பிளேயிங் XI அறிவிப்பு.. சூப்பர் ஸ்டார் வீரர் வருகை.. குழப்ப தேர்வு
“இரண்டு வலிமையான ஃபினிஷர்களுடன் இந்திய டி20 அணி மிக சிறப்பாக எதிர் காலத்தில் செயல்படும். அந்த இடத்தில் விளையாட நல்ல பேட் வேகம் தேவை. ரியான் பராக் இயல்பாகவே வலிமையாக அடிக்கக் கூடியவராக இருக்கிறார். மேலும் ஹர்திக் பாண்டியாவும் அப்படியானவர். அதே சமயத்தில் இவர்கள் இருவரும் ஆல் ரவுண்டர்கள் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். இந்தியாவுக்கு டி20க்கும் அடுத்து ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சாம்பியன் டிராபிக்கும் தனித்தனி அணிகள் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.