தண்ணீர் கொண்டு வரவா நான் இருக்கேன்.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறித்து சாம் பில்லிங்ஸ் கருத்து

0
4685

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் தொடர்ந்து பார்மில் இல்லாத காரணத்தால் அவருக்கான உரிய இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியில் இடம் பிடித்த சாம்பில்லிங்ஸ் நடப்பு தொடரிலிருந்து விலகி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ் எல் தொடரில் விளையாடியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாம்பில்லிங்ஸ்  தற்போது கிரிக்கெட் வீரராக முக்கிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய திறமையை நிரூபிக்க  வேண்டும். இங்கிலாந்து அணியிலும் சரி ஐபிஎல் அணியிலும் சரி பெஞ்சில் அமர்ந்து நேரத்தை கழிக்க நான் விரும்பவில்லை.

இங்கிலாந்தில் விலை உயர்ந்த தண்ணீர் கொண்டு சென்று கொடு க்கும் வீரராக நான் தான் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் விளையாட கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு பெஞ்சில் சும்மாக அமர்ந்திருப்பது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. மனதளவில் நான் நெருக்கடியை சந்தித்து வருகிறேன்.

இதனால் தான் வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட நான் பங்கேற்காமல் பிஎஸ்எல் தொடரில் விளையாட சென்றேன். அங்கு எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. என்னுடைய திறமையை நான் அங்கு நிரூபிக்கிறேன்.  ஓர் வீரனுக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் இருக்கும். இதனால் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் தான் கவுண்டி கிரிக்கெட் விளையாட முடிவெடுத்திருக்கிறேன்.

- Advertisement -

அதில் விளையாடி டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்க முயற்சி செய்வேன். நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் லீக் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். என்னால் பென் ஸ்டோக்ஸ், ஹாரி புருக்ஸ் போன்ற அளவு என்ன சம்பாதிக்க முடியாது ஆனால் இந்த பணமே எனக்கு போதுமானது என்று சாம் பில்லிங்ஸ் கூறியுள்ளார்.