இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 1 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் இளம் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் அதிரடியாக சதம் அடித்து கலக்கி இருக்கிறார்.
சாய் சுதர்சன் தன் பேட்டிங்கை மெருகேற்றிக் கொள்வதற்காக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டை பெரிதும் நம்பி இருக்கிறார். இதற்காக அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு துவக்க முதலே அங்கு நல்ல சாதனைகள் கிடைத்து வருகிறது.
சாய் சுதர்சன் சதம்
நேற்று துவங்கிய போட்டியில் நாட்டின்ங்ஹாம்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் மிகச் சிறப்பாக விளையாடி 266 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 161 ரன்கள் குவித்தார்.
மேலும் வில் ஜேக்ஸ்74 பந்துகளில் 59 ரன்கள், ஜோர்டன் கிளார்க் 92 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்கள். இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் ஆறாவதாக களமிறங்கிய சாய் சுதர்சன் மிகச் சிறப்பாக விளையாடி 178 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 105 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார். இரண்டாவது நாளில் சாய் சுதர்சனின் சர்ரே அணி 525 ரன்கள் குவித்து இருக்கிறது.
சேவாக் ஸ்டைல் ஸ்பெஷல் சிக்ஸ்
இதில் சாய் சுதர்சன் 98 ரன்கள் எடுத்திருந்தபொழுது சேவாக் ஸ்டைலில் இறங்கி வந்து சுழல் பந்து வீச்சுக்கு எதிராக சிக்ஸர் அடித்து தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்னிங்ஸில் சதம் அடிப்பதற்காக மட்டுமே அந்த ஒரு சிக்ஸரையும் அடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க : லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2024 ஏலம்.. அதிக தொகைக்கு போன முதல் 5 வீரர்கள்.. ஒரே ஒரு இந்திய வீரர்
அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் துலீப் டிராபி துவங்க இருக்கிறது. இதில் ருதுராஜ் கேப்டனாக இருக்கும் சி அணியில் சாய் சுதர்சன் இடம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் இரண்டு கவுண்டி போட்டிகளில் விளையாடுவதற்காக சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து பறந்தார். தற்போது அந்த போட்டிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து வந்து உடனே துலீப் டிராபி விளையாடுவார். தற்போது இவரது பேட்டிங் பார்ம் கேப்டன் ருதுராஜை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.