சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அபாரமாக விளையாடி இருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் விளையாடி வங்கதேச அணிக்கு மிகப்பெரிய ரன்கள் இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்ததை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த இருவருக்கும் தனது பாராட்டை தெரிவித்து இருக்கிறார்.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களும், வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 184 ரன்கள் குவித்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் களம் இறங்கிய இந்திய அணியில் சுப்மான் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தனர்.
கில் 176 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 119 ரன்கள் குவித்தார். மறுமுனையில் ரிஷப் பண்ட் தனது பங்குக்கு 128 பந்துகளை எதிர்கொண்டு 13 பௌண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் என 109 ரன்கள் குவித்தனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்த இருவரையும் பாராட்டை தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது “சுப்மான் கில் சதம் அடித்ததை பார்த்து ரசித்தேன். ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தாலும் எப்போதும் போலவே கூர்மையாகவே இருக்கிறார். அவர்கள் இருவரையும் இது இப்படி பார்ப்பதில் சிறந்த மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவர்கள் இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்த நிலையில் நான்கு விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி டிக்ளர் செய்தது. இந்த அழகான பாராட்டை சச்சின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் வங்கதேச அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்துள்ளது.
இதையும் படிங்க:68 ரன்.. அலெக்ஸ் கேரி அதிரடி.. ஆஸி அணி வெற்றி.. இங்கிலாந்து அணியின் தொடரும் பலவீனம்.. உள்நாட்டில் தோல்வி
இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் பின் தங்கி இருக்கும் நிலையில் 357 ரன்கள் வங்கதேச அணி இன்னும் எடுக்க வேண்டிய இருப்பதால் இந்த போட்டியில் தற்போது இந்திய அணியின் கைகளே அதிகம் ஓங்கி இருக்கிறது என்று தெரிகிறது. எனவே அடுத்த இரண்டு நாட்கள் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.