மீண்டும் கிரிக்கெட் ஆடும் சச்சின் டெண்டுல்கர்.. டி20 லீக்கில் மாஸ் கம்பேக்.. ரசிகர்கள் உற்சாகம்

0
292

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் உலகின் பல்வேறு மூத்த நட்சத்திர வீரர்கள் பங்கு பெறும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. உலகின் ஆறு கிரிக்கெட் நாடுகள் இந்த லீக் தொடரில் பங்கேற்க உள்ளன.

இந்த சூழ்நிலையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தத் தொடரில் விளையாடுவதற்கு ஆர்வமாக இருப்பதற்கான முக்கிய காரணங்கள் குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐஎம்எல் எனப்படும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் உலக கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான்களாக திகழ்ந்த மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டி ஆர்வத்தை தூண்டும் வகையிலும், கடந்த கால நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தும் வகையிலும் இந்த டி20 கிரிக்கெட் லீக் தொடர் அமைய உள்ளது. இதில் உலக நாடுகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள் பங்கு பெற உள்ளன.

இதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மீண்டும் விளையாட காத்திருக்கிறார். மேலும் இந்திய முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்த லீக் தொடரின் கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே இந்த கிரிக்கெட் லீக் கருத்து குறித்து சச்சின் டெண்டுல்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “கிரிக்கெட் இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்து வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரானது கடந்த தசாப்தத்தை விட தற்போது புதிய ரசிகர்களை ஈர்த்து வருகிறது. பழைய கால கிரிக்கெட்டை மீண்டும் புதிய வடிவங்களில் காண பல வயதினரிடையே ஆசை இப்போது உள்ளது. விளையாட்டு வீரர்கள் எப்போதுமே உடல் அளவில் ஓய்வு பெறுவார்கள் தவிர மனதளவில் ஓய்வு பெற மாட்டார்கள்.

மேலும் போட்டித் தொடர் களத்தில் இறங்குவதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரை ஆர்வமுள்ள ரசிகர்கள் மற்றும் சவாலான கிரிக்கெட் வீரர்களுக்கான சந்திப்பு புள்ளியாக கருதுகிறோம். இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் தங்களுக்கு முழு திறனை வெளிப்படுத்தி விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் வாயால சொல்றாரு.. ஆனா ஜெய்ஸ்வால் அந்த விஷயத்தை பேட்டால செய்றாரு – அஜய் ஜடேஜா பிரமிப்பு

நாங்கள் எங்களது நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் அனைவரும் சிறந்த தரமான கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெறுவதற்கு விரும்புகிறோம். எனவே அதற்காக கடுமையாக முயற்சிப்போம்” என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -