நீங்க செஞ்ச இந்த விஷயம்.. ஒவ்வொரு ரசிகனின் இதயத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் – தவானுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

0
55

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்தாலும் இந்தியாவின் பாரம்பரிய தொடரான ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2019ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமான இடது கை தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இருதரப்பு, முத்தரப்புத் தொடர்களில் சிறப்பாக விளையாடுவதை விட இந்திய அணி விளையாடும் ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் இவருக்கு மிஸ்டர் ஐசிசி என்ற புனைப் பெயரும் உண்டு. கிட்டத்தட்ட 12 ஆண்டு காலமாக இந்திய கிரிக்கெட்டுக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடியிருக்கிறார்.

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகிய மூவர் கூட்டணி ஒன்று சேர்ந்தால் எப்படிப்பட்ட ரன்கள் இலக்கை வேண்டுமானாலும் விட்டுப் பிடித்து விடும் திறமை இவர்களிடத்தில் உண்டு. குறிப்பாக ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயத்த 350 ரன்கள் இலக்கை கூட மிக எளிதாக எட்டிப் பிடித்து வெற்றி பெற்றார்கள். இவரது சாதனையை நிச்சயமாக நினைவு கூறப்படும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தவானுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சச்சின் விரிவாக கூறும்போது “சிகார் தவான் தொடக்க ஆட்டக்காரராக உங்களது அட்டகாசத்தை மைதானம் நிச்சயமாக தவற விடும். உங்களது புன்னகை, உங்கள் நடை விளையாட்டின் மீதான உங்கள் காதல் ஆகியவை எப்போதும் மாறாக ஒரு தொற்று நோயாகவே இருக்கும். உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் பக்கத்தை நீங்கள் திருப்பும் போது உங்கள் மரபு கிரிக்கெட்டை ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

அதை மட்டும் நன்றாக அறிந்து கொள்ளுங்கள். எனவே இனி அடுத்து எது நடந்தாலும் மகிழ்ச்சியோடு இருங்கள். என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதும் இருக்கும்” என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார். ஏற்கனவே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் வாழ்த்தை தெரிவித்து தவானை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க:ரிஸ்வான் அந்த விஷயத்துல மோசமான ஆளு.. சக அம்பயர எச்சரிக்கை பண்ணினேன் – இந்திய நடுவர் அனில் சவுத்ரி பேட்டி

தவான் கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக சதம் விளாசிய நிலையில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அதற்குப் பிறகு எந்த ஒரு ஐசிசி தொடரிலும் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -