இந்தியாவை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் குறித்து வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்து பேசியிருக்கிறார்.
கிரிக்கெட் களத்தில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் சில குறும்பான வேலைகளை செய்து அதனால் விமர்சனங்களை அடிக்கடி சந்திக்க கூடியவராக இருந்திருக்கிறார். அவரது அணிக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்பட்டாலும் கூட, நடுவர் மற்றும் எதிரணிக்கு எரிச்சலை உண்டாக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவார்.
இந்திய கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி
டெல்லியைச் சேர்ந்த தற்பொழுது 59 வயதான இவர் இந்தியாவில் இருந்து கிரிக்கெட் நடுவராக நீண்ட காலமாக இருந்து வருகிறார். முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்ட டி20 தொடரில் சர்வதேச கிரிக்கெட் நடுவராக களம் கண்டார். பிறகு அதே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திலும், 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலும் சர்வதேச கிரிக்கெட் நடுவராக களம் கண்டார்.
மேலும் 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை தொடர்களில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். மேலும் கிரிக்கெட் களத்தில் முகமது ரிஸ்வான் விக்கெட் கீப்பராக அதிக அப்பீல்கள் கேட்டு நடுவர்களை எரிச்சல் அடைய வைப்பார். மேலும் திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக எதிரணியை குழப்பமடைய வைத்து ரன்கள் எடுப்பார். இதெல்லாம் களத்தில் எதிரணி மற்றும் நடுவர்களுக்கு பெரிய எரிச்சலை உண்டாக்கக்கூடிய விஷயமாக இருந்து வந்திருக்கிறது.
ஏன் மோசமாக நடந்து கொள்ள வேண்டும்?
இதுகுறித்து தற்பொழுது பேசியிருக்கும் இந்திய நடுவர் அனில் சவுத்ரி கூறும் பொழுது “முகமது ரிஸ்வான் அதிக அப்பீல்கள் தேவையில்லாமல் செய்வார். இதன் காரணமாக என் சக நடுவரிடம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்குமாறு சொல்லி இருக்கிறேன். அவர் ஒவ்வொரு பந்துக்கும் கத்திக் கொண்டே இருப்பார். உதட்டில் லிப்ஸ்டிக் போல ஒன்றை போட்டுக் கொண்டு, புறா போல குதித்துக் கொண்டே இருப்பார்.
இதையும் படிங்க : இப்படி தார் ரோடு பிட்ச் இருந்தா என்ன செய்யறது?.. என்னமோ நெனச்சு ஏதோ நடக்குது – பாக் நசீம் ஷா வருத்தம்
தற்சமயத்தில் தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறது. இப்படியான காலகட்டத்தில் முகமது ரிஸ்வான் இப்படி நடந்து கொண்டு ஏன் தன்னை மோசமாகக் காட்டிக் கொள்ள வேண்டும்? உண்மையில் வெளியில் இருக்கும் மக்கள் இது போன்ற விஷயங்களை கேலி செய்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.