அன்கேப்டு பிளேயர் விதி.. தோனிக்கு மட்டுமே யூஸ் ஆகாது.. எல்லா டீமுக்குமே நல்லதுதான் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
82
Dhoni

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியை அன்கேப்டு பிளேயர் லிஸ்டில் வைப்பதால் அது அவருக்கு மட்டும் இல்லாமல், பலருக்கும் நன்மையாகவே அமையும் என்று ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்துடன் நடைபெறுகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் சில புதிய விதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்திய அணிக்காக ஐந்து வருடங்கள் விளையாடாமல் இருப்பவர்கள் அன்கேப்டு பிளேயர் லிஸ்டில் சேர்க்கப்படுவார்கள். இவர்களை நான்கு கோடிக்கு தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தோனிக்காக கொண்டு வரவில்லை

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “அன்கேப்டு பிளேயர் விதி எதற்காக தேவைப்படுகிறது என்றால், இந்த விதியால் ஒரு வீரரை நீங்கள் நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொள்ளலாம். உங்கள் பர்ஸ் பாதிப்படையாது. மேலும் நீங்கள் தக்க வைக்கும் ஐந்து வீரர்களில் முதல் மற்றும் நான்காவது வீரருக்கு 18 கோடி, இரண்டு மற்றும் ஐந்தாவது வீரருக்கு 14 கோடி, கொடுக்க வேண்டும். ஐந்து வீரர்களை தக்க வைத்தால் 75 கோடி ஆறு வீரர்களை தக்க வைத்தால் 79 கோடி செலவாகிவிடும்”

“இந்த அன்கேப்டு விதி பற்றி பேசும்பொழுது மகேந்திர சிங் தோனி விவாதத்தில் இருந்தார். இந்த விதி 2008 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இருந்தது. இதை யாரும் பயன்படுத்தாமல் இருந்த காரணத்தினால் நீக்கினார்கள். தற்பொழுது தேவை என்பதால் கொண்டு வந்திருக்கிறார்கள்”

- Advertisement -

இந்த விதி பலருக்கும் நன்மை தரும்

“இந்த விதியை எடுத்துக் கொண்டால் இந்த பட்டியலில் மோகித் சர்மா, பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, மயங்க் மார்க்கண்டே, விஜய் சங்கர் மற்றும் சந்தீப் சர்மா போன்றவர்கள் இருக்கிறார்கள்.மேலும் இந்த விதியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் ஷஷாங்க் சிங்கை தக்க வைக்க நினைக்கும்”

இதையும் படிங்க : 156 வீசியும் ஏமாற்றம்.. லக்ஷ்மன் மட்டும்தான் மயங்க யாதவ் இந்திய அணியில் இடம் பிடிக்க காரணம் – கோச் பேட்டி

“ஐபிஎல் ஏற்பாட்டளர்கள் ஒரு சமநிலையை உருவாக்க விரும்பி இருக்கிறார்கள். திடீரென யோசித்தால் எல்லா அணியிலும் தக்க வைப்பதற்கு திறமையான அன் கேப்டு வீரர் இருப்பதாகவே நமக்கு தெரிகிறது. எல்லா அணிகளும் இந்த விதியை ஒருமனதாக ஆதரித்திருக்கும். சிஎஸ்கே அணிக்கு தோனி 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு விளையாடுவார் என்பது உறுதி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -