இந்திய டெஸ்ட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடிய அனுபவம் எப்படியாக இருந்தது? என்று பேசியிருக்கிறார்.
கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியத் தேர்வுக்குழு அதிரடியாக இஷான் கிஷான் இடத்திற்கு துருவ் ஜுரலை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தியது. கீழ் வரிசையில் முதிர்ச்சி அடைந்த பேட்ஸ்மேன் போல விளையாடி வெற்றிக்கு பங்களித்து துருப் ஜுரல் திருப்பி ஆச்சரியப்படுத்தினார்.
கவாஸ்கர் வெளியிட்ட கணிப்பு
இவரது ஆட்டத்தை பார்த்த இந்திய லெஜன்ட் சுனில் கவாஸ்கர் அடுத்த மகேந்திர சிங் தோனியாக இந்திய கிரிக்கெட்டில் துருவ் ஜுரல் வர முடியும் என்று கூறினார். ஆட்ட சூழ்நிலையை வேகமாக புரிந்து கொண்டு அவர் பொறுப்பு எடுத்து விளையாடுவது மகேந்திர சிங் தோனியை பார்ப்பது போலவே இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்துக்கு துருவ் ஜுரல் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். துலீப் டிராபியில் ஒரு போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் சரியாக விளையாடாத போதும் கூட இந்திய அணி நிர்வாகம் அவரை நம்புகிறது.
ரோகித் சர்மா எங்களிடம்தான் கேட்டார்
இந்த நிலையில் தன்னுடைய கேப்டன் ரோகித் சர்மா பற்றி கூறியிருக்கும் துருவ் ஜுரல் ” ரோகித் பாய் சீனியர்களுடன் அமர்ந்து ஆட்டம் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் ஜூனியர்களான என்னிடமும், ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் இடமும்தான் அவர் ஆட்டம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். எங்களை அழைத்து போட்டியில் என்ன நடக்கிறது? என்று கேட்பார். இது குறித்து என்னிடம் கேட்டால் இது வேடிக்கையானது.
இதையும் படிங்க : ஆஸியின் ஸ்மித் பிளான்.. கம்பீர் அகர்கர் பதிலடி திட்டம்.. ஹர்திக் பாண்டியா வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ.. என்ன நடக்கிறது?
நாங்கள் மைதானத்தில் இந்திய அணிக்காக விளையாடும் பொழுது தீவிரம் குறைவாக இருக்க முடியாது என்று அவர் நினைக்கிறார். ஏனென்றால் இந்திய அணிக்காக எல்லோருமே விளையாட விட முடியாது. மேலும் தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே நாங்கள் 100% எங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மேலும் அவரும் 100% கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். போட்டியில் எங்களை அங்கேயும் இங்கேயும் அனுப்புவார். ஆனால் போட்டி முடிந்து மாலையில் எல்லாம் சாதாரணமாகிவிடும்” என்று கூறி இருக்கிறார்.