உலக கிரிக்கெட்ல இதை செய்ற கடைசி ஆள் விராட் கோலியா இருக்கணும்.. ப்ளீஸ் ஓய்வு வேண்டாம் – ரசிகர்கள் வலியுறுத்தல்

0
218
Virat

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக் கூடாது என்றும், உலக கிரிக்கெட்டில் ஒரு சாதனையை செய்த கடைசி வீரராக விராட் கோலியே இருக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து விராட் கோலி இப்படியான முடிவில் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் நம்பத் தகுந்த வகையில் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய அணி இறுதியாக ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் முதல் டெஸ்டில் சதம் அடித்த விராட் கோலி அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் மிகவும் மோசமான முறையில் தொடர்ந்து ஆட்டம் இழந்தார். அவருடைய பேட்டிங் ஃபார்ம் இந்தியா அணியின் படுதோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் விராட் கோலி தனது சக வீரர்களிடம் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக கூறியிருக்கிறார். மேலும் ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி ஓய்வு பெற முடிவு செய்ததாகவும், ஆனால் அணி தடுமாற ஆரம்பித்து விடும் என்பதால் அவர் இந்த முடிவை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி கடைசி வீரர்

தற்போது விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை தாண்டி விட்டார். அதே சமயத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை தாண்டி இருக்கிறார். இன்னும் 800 ரன்கள் எடுத்தால் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் தாண்டிய வீரராக மாறுவார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இரண்டிலும் பத்தாயிரம் ரன்கள் அடித்த வீரராக மாறுவார்.

இதையும் படிங்க : திரும்ப ஐபிஎல்-லை நடத்த.. பிசிசிஐ இதை கட்டாயம் செய்யும்.. பின்னணி காரணம் இதுதான் – கங்குலி பேச்சு

மேலும் இதை விராட் கோலி செய்யும் பொழுது இரண்டு வடிவத்திலும் பத்தாயிரம் ரன்கள் எடுத்த கடைசி வீரராக விராட் கோலி இருக்கவே அதிக வாய்ப்புகள் வரலாற்றில் இருக்கிறது. ஏனென்றால் இனி ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வீரர் பத்தாயிரம் ரன்கள் எடுக்கும் அளவுக்கு போட்டிகள் நடத்தப்படாது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பத்தாயிரம் ரன்கள் அடித்த பிறகு ஓய்வு பெற வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

- Advertisement -