இன்று டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி செயிண்ட் லூசியா மைதானத்தில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாதனை பேட்டிங் செய்து ரன்கள் கொடுத்திருக்கிறார்.
இந்த போட்டியில் வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பு அதிகபட்சம் இருக்கும் என்கின்ற நிலையில் ஆஸ்திரேலிய களம் இறங்கியது. மேலும் டாஸ் ஆஸ்திரேலியா பக்கமே சென்றது. மைதான புள்ளி விபரங்களின்படி முதல் பேட்டிங் சாதகமாக இருந்தாலும் கூட, ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக வந்ததில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார். ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து தனி வீரராக ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணியை வைத்து செய்தார். ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 29 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா 19 பந்தில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் அனல் பறந்தது. இறுதியாக 41 பந்தில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சூரியக்குமார் யாதவ் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து சிவம் துபே 22 பந்தில் 28 ரன், ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 27* ரன், ரவீந்திர ஜடேஜா 5 பந்தில் 9* ரன் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா அணித்தரப்பின் ஸ்டார்க் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : இந்திய அணியில் இடமில்லை.. கம்மின்ஸ்காக எது வேணாலும் செய்யலாம்.. காரணம் இதுதான் – நடராஜன் பேட்டி
இந்த போட்டியில் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் முதல் வீரராக 200 சிக்ஸர்கள் அடித்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 19 ஆயிரம் ரன்கள் கடந்தார். டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி வேகமாக 100 ரன்கள் எடுத்தது. மேலும் இந்த டி20 உலக கோப்பையில் 19 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்தார். அடுத்து டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக பவுண்டரிகளை அடித்திருக்கிறார். ஆஸ்திரேலியா மணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையையும் படைத்திருக்கிறார்.