இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நீண்ட நாட்கள் கழித்து சிவப்பு பந்து வடிவத்திற்கு துலீப் டிராபியில் திரும்பியிருந்தார். இதழில் இன்று வழக்கம் போல் அதிரடியான பேட்டிங்கில் அரைசதம் அடித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
ரிஷப் பேண்ட் 2022 ஆம் ஆண்டு இறுதியில் மோசமான சாலை விபத்தில் சிக்கினார். நடுவில் ஒரு வருடம் அவரால் முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை க்கு இந்திய அணிக்கு வெள்ளைப்பந்து வடிவத்தில் திரும்பினார். தற்போது திலீப் டிராபியில் சிவப்பு பந்து வடிவத்தில் பேட்டிங் ஃபார்மை நிரூபித்திருக்கிறார்.
கேப்டன் ரோகித் சர்மா விருப்பம்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரிஷப் பண்ட்டுக்கு பேட்டிங்கில் இருக்கும் திறமைக்கு ஏதாவது செய்து தர வேண்டும் என்று விரும்புவதாக ஏற்கனவே கூறியிருந்தார். இதன் காரணமாகவே அவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் டி20 உலகக்கோப்பையில் பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக கொண்டு வந்தார்.
மேலும் இந்திய அணி செப்டம்பர் 19 முதல் அடுத்தடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இதில் மிக முக்கியமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அங்கு சென்று விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருக்கிறது. எனவே ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் பிளேயிங் லெவனில் இடம் பெற்ற ஆகவேண்டிய அவசியம் இருக்கிறது. இதையே இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தில் கேப்டன் ரிஷப் பண்ட்தான்
இந்த நிலையில் பேட்டிங்கில் தன்னை நிரூபித்தது மட்டுமில்லாமல் இந்திய ஏ அணிக்கு எதிரான போட்டியில் துருவ் ஜுரல் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது, தன்னுடைய பி அணியின் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியை அழைத்து சில யோசனைகளை ரிஷப் பண்ட் கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே அவருடைய விக்கெட்டை நவ்தீப் ஷைனி எடுத்தார்.
மேலும் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ஆவேஷ் கான் பந்துவீச்சில் துருவ் ஜுரல் அவுட் அப்பீல் கேட்டார். இந்த நிலையில் எதிரணியாக இருந்த போதும் ரிஷப் பண்ட் ஆவேஷ் கானிடம் பந்து எங்கும் படவில்லை தேவையில்லாமல் ரிவ்யூவை இழந்து விடாதீர்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். இது களத்தில் அப்பொழுது நகைச்சுவையான ஒன்றாக அமைந்தது.
இதையும் படிங்க : 34 பந்தில் மாஸ்.. ரிஷப் பண்ட் சர்பராஸ் அதிரடி.. நடப்பது புரியாமல் நின்ற கில்.. இந்தியா பி அணி முன்னிலை
இதுகுறித்து பேசி இருக்கும் தமிழகத்தின் முன்னாள் வீரர் டபிள்யூவி.ராமன் கூறும் பொழுது “யார் கேப்டன் என்பது இந்த பிரச்சினையே கிடையாது. களத்தில் ரிஷப் பண்ட் எப்பொழுதும் கேப்டன் போலதான் இருப்பார். துருவ் ஜுரல் விக்கெட்டை எடுப்பதற்கு முன்னால் நவ்தீப் சைனியை அழைத்து ரிஷப் பண்ட் சில ஆலோசனைகளை வழங்கினார். அதுதான் அடுத்து உடனுக்குடன் வேலை செய்தது” என்று கூறியிருக்கிறார்.