தற்போது பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் துலீப் டிராபி தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஏ அணியும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய பி அணியும் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இந்த போட்டியில் இந்திய பி அணியில் இந்திய நட்சத்திர விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இடம்பெற்று இருக்கிறார். முதல் இன்னிங்ஸ் ஏமாற்றம் தந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் தன்னுடைய வழக்கமான அதிரடி அணுகுமுறையில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் தன்னுடைய மறு வருகையை அழுத்தமாக அறிவித்திருக்கிறார்.
முஷீர் கான் மிரட்டல்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய பி அணிக்கு இளம் வீரர் முஷீர் கான் 181 ரன்கள் எடுத்து அணியைக் காப்பாற்றினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆகாஷ் தீப் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய ஏ அணிக்கு கேஎல்.ராகுல் 37, மயங்க் அகர்வால் 36 மற்றும் ரியான் பராக் 30 ரன்கள் எடுத்தார்கள். இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸ் இல் 231 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முகேஷ் குமார் மற்றும் நவ்தீப் ஷைனி தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
ரிஷப் பண்ட் மறு வருகை
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை 90 ரன்கள் முன்னிலையில் தொடங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வால் அபிமன்யு ஈஸ்வரன், முஷீர் கான் என 22 ரன்களில் இழந்துவிட்டது. இந்த நிலையில் சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஜோடி அதிரடியாக 56 பந்தில் 72 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சர்பராஸ் கான் துரதிஷ்டவசமாக 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : எங்க பாகிஸ்தான் டீம்க்கு.. இந்த இந்திய வீரர் தேவை.. வேற வழியே இல்ல – டேனிஷ் கனேரியா விமர்சனம்
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 34 பந்தில் அரைசதம் அடித்தார். மேற்கொண்டு விளையாடிய அவர் 47 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார். இன்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா பி அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 240 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. ரிஷப் பண்ட் நீண்ட நாளுக்கு பிறகு சிவப்புப்பந்து வடிவத்தில் திரும்பி தன்னுடைய பாணியில் அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.