நான் இந்தவொரு இந்திய வீரருக்காக சல்யூட் பண்றேன்.. அவங்க 2 பேர் இல்லாம டீமே இல்ல – கம்ரன் அக்மல் பேச்சு

0
754
Kamran

பாகிஸ்தான அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் செயல்பட்ட விதம் குறித்து மிகவும் பாராட்டி பேசி இருக்கிறார்.

பங்களாதேஷ அணி இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வருவதற்கு முன்பாக, பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி, இரண்டு போட்டிகளையும் வென்று தொடரையும் வென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அணியாக சேர்ந்து வந்த வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் முக்கிய காரணமாக இருந்தார்கள். முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் மூவரும் முக்கியமாக இருந்தார்கள்.

இதற்கு அடுத்து இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் சுப்மன் கில் மற்றும் இருவரும் சிறப்பான முறையில் விளையாடி சதம் அடித்தார்கள். இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா அசத்தலாக விக்கெட் கைப்பற்றி போட்டியை முடித்தார்கள். இப்படி ஒவ்வொரு வீரராக வெளிப்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை கொண்டு வந்தார்கள்.

- Advertisement -

இவர்கள் இல்லாமல் அணியை அமைக்கவே முடியாது

இந்திய அணியின் வெற்றி குறித்து பேசி இருக்கும் கம்ரன் அக்மல் கூறும் பொழுது “ரவிச்சந்திரன் அஸ்வின் ஆல்ரவுண்ட் செயல் திறனை வெளிப்படுத்தினார். அவர் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் சதம் அடித்து, இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் ரவீந்திர ஜடேஜா மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப்பில் இருந்தார். இவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய டெஸ்ட் பிளேயிங் லெவனை இந்தியாவில் அமைக்கவே முடியாது. இருவரும் மிகச் சிறந்த பர்பார்மார்கள்”

இதையும் படிங்க : எங்க ஆஸி டீமை எங்க இடத்துல வீழ்த்த.. இந்த 2 இந்திய வீரர்களே போதும்.. முடிச்சிடுவாங்க – இயான் சேப்பல் கருத்து

“கில் தனது தரத்துக்கு தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒரு குறிப்பிடத்தக்க வீரர். எனவே அவர் ரன்கள் எடுப்பதும் மிகவும் முக்கியம். மேலும் ரிஷப் பண்ட் அபாரமான பர்பாமன்ஸை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரை மீண்டும் களத்திற்கு கொண்டு வந்த மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நான் சல்யூட் செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -