இந்தியாவில் 2 பேர்.. அதில் ஒருத்தர் ரிஷப் பண்ட்.. இதயத்தை ஜெயிச்சிட்ட தம்பி – பாக் பசித் அலி பேட்டி

0
736
Basit

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்று சதம் அடித்தார். இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு இறுதியில் ரிஷப் பண்ட் மோசமான சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரையில் மறுவாழ்வில் இருந்து திரும்பி வந்தார். பின்பு அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செயல்பட்டு தற்போது மூன்று வடிவ கிரிக்கெட் இந்திய அணியிலும் இடம் பிடித்து அசத்தி வருகிறார்.

- Advertisement -

வட்டி முதலுமாக திருப்பித் தந்த ரிஷப் பண்ட்

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறிய நேரத்தில் தவறான ஒரு ஷாட் விளையாடி ரிஷப் பண்ட் 39 ரன்களில் வெளியேறினார். தவறான நேரத்தில் தவறான ஷாட் ஆடி தனது விக்கெட்டை கொடுத்ததால் அவர் அப்பொழுது மிகவும் கோபமாக இருந்தார்.

அதே சமயத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் எந்த இடத்தில் பொறுமையாக இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் பொறுமையாக இருந்து, எந்தப் பந்தை தவிர்க்க வேண்டுமோ அந்தப் பந்தை தவிர்த்து, தனக்கான நேரம் மற்றும் பந்தில் பட்டைய கிளப்பி அதிரடியாக சதத்தை அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தன்னுடைய மறுவருகையை அழுத்தமாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதயங்களை வென்ற ரிஷப் பண்ட்

இன்று ரிஷப் பண்ட் மொத்தமாக 128 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 109 ரன்கள் எடுத்தார். மேலும் கில் உடன் இணைந்து 217 பந்துகளில் 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதிரடியாக விளையாடிய அதே வேளையில் காலையில் உள்ளே வந்ததும் பொறுப்பை காட்டி அமைதியாகவும் இருந்தார். அவரது முதிர்ச்சி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “இந்தியாவில் தாக்குதல் பாணியில் விளையாடுவதையே தற்காப்பாக கொண்டிருக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இரண்டாவதாக இருப்பவர் ரிஷப் பண்ட். முதலாவதாக இருப்பவர் விரேந்திர சேவாக். இவர்கள் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கக் கூடியவர்கள்”

இதையும் படிங்க : நான் உத்தரவாதம் தரேன்.. ரிஷப் பண்ட் வாழ்நாள்ல இந்த சாதனையை பண்ணுவார் – பங்களாதேஷ் தமிம் இக்பால் நம்பிக்கை

“இன்று ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு வந்து ஆக்ரோஷமான தாக்குதல் பாணி ஆட்டத்தையே தன்னுடைய தற்காப்பு ஆட்டமாக மாற்றி அபாரமான சதம் அடித்தார். இதனால் அவர் எல்லோருடைய இதயங்களையும் வென்றார். அவர் மிகத் திறமையான வீரர்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -