நான் உத்தரவாதம் தரேன்.. ரிஷப் பண்ட் வாழ்நாள்ல இந்த சாதனையை பண்ணுவார் – பங்களாதேஷ் தமிம் இக்பால் நம்பிக்கை

0
285
Rishabh

இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆறாவது சதத்தை அடித்தார். இந்த நிலையில் அவரைப் பாராட்டி பங்களாதேஷ் முன்னாள் வீரர் தமிம் இக்பால் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து இரண்டாவது பவுண்டரிக்கு ஆசைப்பட்டு பந்தில் லென்த்தை தவறாக கணித்து விளையாடி ரிஷப் பண்ட் 39 ரன்கள் ஆட்டம் இழந்துவிட்டார். அந்த நேரத்தில் ஆடுகளம் கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங் செய்ய சாதகமாக மாறி வந்திருந்தது. அப்பொழுது அவர் ஒரு சதத்தை தவறவிட்ட அளவுக்கு வருத்தத்துடன் வெளியே சென்றார்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸ் கலக்கல்

இதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து 109 ரன்கள் குவித்து ரிஷப் பண்ட் அசத்தார். அவருக்கு இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதமாக பதிவானது. மேலும் ரிஷப் பண்ட் ஆறுமுறை 90 ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டம் இழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் அதிரடிக்கு செல்லாமல் சதத்தை நோக்கி விளையாடியிருந்தால் இப்போது இரட்டை இலக்கத்தில் சர்வதேச டெஸ்ட் சதம் அடித்திருப்பார்.

இன்று அடித்த சதத்தின் மூலமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்து இருந்த விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி செய்திருந்த சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்திருக்கிறார். தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்கள் அடித்ததை ரிஷப் பண்ட் 34 டெஸ்ட் போட்டிகளில் செய்திருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் இந்த சாதனையை செய்வார்

இந்த நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பேசி இருக்கும் பங்களாதேஷ் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் பாராட்டி பேசும் பொழுது “நான் உறுதியாக உத்தரவாதம் தருகிறேன் ரிஷப் பண்ட் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பராக எதிர்காலத்தில் வருவார்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : 357 ரன் 6 விக்கெட்.. பண்ட் கில் அஸ்வின் கலக்கல்.. பங்களாதேஷ் சாதிக்குமா?.. வெற்றிக்கு அருகில் இந்திய அணி

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் கூறும் பொழுது ” ரிஷப் பண்ட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 சதங்களுக்கு மேல் அடிப்பார் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார். கம்பீர் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டை ஆறாவது இடத்திற்கு தள்ளாமல் ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்து விளையாட வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -