ரோகித் பாய் கிட்ட அதை கேட்டு வாங்கி இருக்கேன்.. இனி இரட்டை சதமும் அடிப்பேன் – ரிஷப் பண்ட் பேட்டி

0
231
Rishabh

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி தன் பாணியில் சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் இது மாதிரி சதங்கள் தொடரும் என ரிஷப் பண்ட் அதிரடியாக கூறியிருக்கிறார்.

இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சதம் அடித்தது அவருக்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்றால், அவர் சதம் அடித்த பிறகு போட்டியில் பயன்படுத்திய தன்னுடைய விளையாட்டு உபகரணங்களை வைத்து வணங்கும் அளவுக்கு மிக முக்கியமான இன்னிங்சை விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

முதல் வாய்ப்பை விட மீண்டு வருவது கடினம்

எப்பொழுதுமே கிடைக்கும் முதல் வாய்ப்பில் சாதிப்பதை விட, அணியில் இருந்து வெளியேறி மீண்டும் வந்த பிறகு சாதிப்பது கடினமான ஒன்றாக கிரிக்கெட் வட்டாரத்தில் பார்க்கப்படும். இந்த வகையில் மோசமான சாலை விபத்தில் சிக்கி அதற்குப் பிறகு விட்ட இடத்தில் இருந்து சாதிப்பது என்பது மிகப்பெரிய விஷயம்.

இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா இதை குறிப்பிட்டு ரிஷப் பண்ட்டை பாராட்டி இருக்கிறார். மேலும் இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் கேஎல்ராகுல் இருந்த காரணத்தினால் ரிஷப் பண்ட் ஆறாவது இடத்தில் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஐந்தாவது இடத்தில் வந்து அதிரடி சதம் அடித்திருக்கிறார்.

- Advertisement -

ரோகித் பாய்கிட்ட கேட்டு வாங்கினேன்

இதுகுறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “ஒரு பேட்ஸ்மேன் என்ன பேட்டிங் ஆர்டரில் களம் இறங்குகிறார் என்பது வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. நான் இதுகுறித்து ரோகித் பாயிடம் விவாதித்தேன். நான் இதற்கு முன்பு ஆறு அல்லது ஏழாம் இடத்தில் களம் இறக்கப்பட்டேன். எனக்கு அந்த சதம் அடிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது.மேலும் அந்த நேரத்தில் என்னுடன் பந்துவீச்சாளர்கள் பேட்டிங்கில் இருப்பதால், என்னுடைய பேட்டிங் மனநிலை மற்றும் அணுகுமுறை வேறாக இருக்கிறது”

இதையும் படிங்க : 92 வருடம்.. இந்திய அணி முதல் முறையாக புது வரலாறு.. ரோகித் படைக்கு சரித்திர பெருமை.. சென்னையில் சாதனை

“அதே சமயத்தில் நான் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கும் பொழுது என்னுடன் ஒரு பேட்ஸ்மேன் இணைந்து பேட்டிங் செய்கிறார். மேலும் வெளியிலும் ஒரு பேட்ஸ்மேன் இருப்பார். எனவே நீங்கள் வழக்கமான ஒரு பேட்ஸ்மேன் போல உங்களை செட் செய்து ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கலாம். இது உங்களுக்கு ரன்கள் எடுக்க வாய்ப்பு கொடுக்கிறது. இதன் காரணமாக நீங்கள் 80 ரன் அல்லது சதம் அடிக்கலாம். மேலும் அந்த இடத்தில் நான் விளையாடும் பொழுது என்னால் இரட்டை சதம் கூட எடுக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -