சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. இந்த 2 விஷயங்களைதான் நான் விரும்பறேன் – ரிஷப் பண்ட் பேச்சு

0
26
Rishabh pant

வங்கதேச அணிக்கு எதிரான சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்பட்டு 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் தொடக்கத்தில் பேட்டிங்கில் இந்திய அணி தடுமாறினாலும் அதற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்தது. அதில் ஓரளவு நன்றாக விளையாடிய ரிஷப் பண்ட் 39 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு விளையாடிய வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இரண்டாவது இன்னிங்ஸ் களம் இறங்கிய இந்திய அணியில் கில் மற்றும் பண்ட்டின் அபார கூட்டணியில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது.

அதில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 128 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர் என 109 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய ரிஷப் பண்ட் சென்னை சேப்பாக்கம் மைதானம் ரொம்ப ஸ்பெஷல் என்றும், இங்கு விளையாடுவது நல்ல அனுபவம் என்றும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த உணர்வு சிறப்பாக இருக்கிறது. முதலில் நான் சென்னையில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். இரண்டாவதாக காயத்திற்கு பிறகு நான் மூன்று வடிவத்தொடர்களிலும் விளையாட விரும்பினேன். டெஸ்ட் வடிவத்தில் இது எனது முதல் போட்டி என்பதால் நான் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். இது நிச்சயமாக ஒரு உணர்ச்சிகரமான தருணமாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன்கள் குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எல்லாவற்றையும் விட நான் அதிகமாக விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வருவது களத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. வெளியே மக்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.சூழ்நிலையை எனக்கு தகுந்தவாறு உணர முயற்சித்தேன். அணியின் சூழ்நிலை 30-3 என்ற நிலைமையில் இருக்கும்போது ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க கில் உடன் நான் அதைச் செய்தேன்.

இதையும் படிங்க:பங்களாதேஷ் 2வது டெஸ்ட்.. 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு.. 2 வீரர்களுக்கு ஏமாற்றம்.. முழு விபரங்கள்

நான் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஒரு சிறந்த உணர்வு” என்று கூறி முடித்திருக்கிறார். கார் விபத்தில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு முதன்முதலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ரிஷப் பண்ட் டி20 உலக கோப்பைக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து நன்றாக பேட்டிங் செய்து இந்திய அணி வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளார்.

- Advertisement -