இதெல்லாம் ரொம்ப தப்பு.. என்னை வச்சு ஆர்சிபி விராட் கோலி என ஏன் பொய்யா சொல்றிங்க? – ரிஷப் பண்ட் கோபம்

0
73
Virat

தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் குறித்து பரப்பப்பட்ட ஒரு தவறான செய்தி குறித்து ரிஷப் பண்ட் கோபமான ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

மோசமான சாலை விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் திரும்பி பேட்ஸ்மேனாக கேப்டனாக விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு ரிஷப் பண்ட் இந்திய அணிக்குள்ளும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆர்சிபி – விராட் கோலி

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டனாக ரிஷப் பண்ட் இணைய இருக்கிறார் என்று ஒரு செய்தி ஆரம்பத்தில் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவியது.

இதற்கு அடுத்து ரிஷப் பண்ட் ஆர்சிபி அணிக்கு செல்ல விரும்பி அந்த அணியிடம் கேப்டன் பொறுப்பை கேட்டுள்ளதாகவும், அதற்கு விராட் கோலி சம்மதிக்கவில்லை என்றும் ஒரு பொய்யான தகவல் சமூக வலைதளத்தில் மீண்டும் ரிஷப் பண்ட் குறித்து மிக வேகமாக பரவியது. தற்பொழுது இதற்கு ரிஷப் பண்ட் தனிப்பட்ட முறையில் விளக்கம் சொல்ல வேண்டிய அளவுக்கு கோபமடைந்திருக்கிறார்.

- Advertisement -

ஏன் இப்படி எல்லாம் செய்யணும்?

இதுகுறித்து ரிஷப் பண்ட் கூறும்போது “இது ஒரு பொய்யான செய்தி. சமூக வலைதளங்களில் ஏன் இவ்வளவு பொய்யான செய்திகளை பரப்புகிறீர்கள்? புத்திசாலித்தனமான நண்பர்களே மோசமான முறையில் நடந்து கொள்ளாதீர்கள். எக்காரணம் கொண்டும் நம்பகத்தன்மை இல்லாத சூழலை உருவாக்காதீர்கள்”

இதையும் படிங்க : 306/3.. சண்டிமால் மேத்யூஸ் அபாரம்.. முதல் நாளிலேயே சிக்கிய நியூசிலாந்து அணி.. இந்திய அணிக்கு கூடுதல் போனஸ்

“இது முதல்முறையாகவும் இருக்கப் போவதில்லை இது கடைசியாகவும் இருக்கப் போவதில்லை. ஆனாலும் நான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்து இருக்கிறேன். தயவுசெய்து உங்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை ஒரு முறை சரி பார்க்கவும்.இது நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இது உங்களுக்காக இன்று மட்டும் இல்லாமல் தவறான தகவலை பரப்பவர்களுக்கும் நான் சேர்த்து சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -