தோனியாய் மாறிய ரிஷப் பண்ட்.. அஸ்வினுக்கே ஐடியா கொடுத்து விக்கெட் எடுத்த மாஸ் சம்பவம் – களத்தில் என்ன நடந்தது?

0
265
Rishabh

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் கேப்டன் நஜ்மல் சாந்தோ விக்கெட்டை கைப்பற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ரிஷப் பண்ட் ஐடியா கொடுத்த சம்பவம் வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நேற்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தர பிரதேஷ் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கியது. மழையின் காரணமாக 34 ஓவர்கள் மட்டுமே போட்டியின் முதல் நாளில் வீசப்பட்டு நிறுத்தப்பட்டது.

- Advertisement -

ஆக்ரோஷத்தை காட்டிய பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் அணி டாஸ் இழந்து இந்த முறை முதலில் பேட்டிங் செய்யும்பொழுது நல்ல அணுகுமுறையை வெளிப்படுத்தியது. ஆகாஷ் தீப் பந்துவீச்சில் முதல் இரண்டு விக்கெட்டுகளை வேகமாக இழந்து விட்டாலும் கூட தொடர்ந்து நம்பிக்கையாக பேட்டிங் செய்தது.

இதைத்தொடர்ந்து மோமினுல் ஹக் உடன் இணைந்த கேப்டன் நஜ்முல் சாந்தோ சிறப்பாக விளையாடி 30 ரன்கள் கடந்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் வந்தது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது தவறான முடிவாக அமைந்துவிட்டது போல் தெரிந்தது.

- Advertisement -

ரிஷப் பண்ட் கொடுத்த ஐடியா

இந்த நிலையில் அஸ்வின் நஜ்முல் சாந்தோவை நிற்க வைத்து ரன் லீக் செய்யாமல் கட்டுப்பாடாகப் பந்து வீசினார். அதே சமயத்தில் விக்கெட் அச்சுறுத்தல் ஏதும் இல்லாமல் இருந்தது. இதைப் பார்த்த ரிஷப் பண்ட் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் ஹிந்தியில் இதே பந்தை இன்னும் கொஞ்சம் மேலே ஃபுல் லென்த்தில் வீசுங்கள் என்று சொன்னார்.

இதையும் படிங்க : 6,0,6,6,6,4.. லிவிங்ஸ்டன் 20 வருட அதிரடி சாதனை.. ஸ்டார்க் மோசமான சாதனை.. இங்கிலாந்து ஆஸ்திரேலியா ODI

இது தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த பந்தை ரிஷப்மென்ட் சொன்னது போலவே வீச நஜ்முல் சாந்தோ எல்பிடபிள்யு முறையில் ஆட்டம் இழந்து 31 ரன்னில் வெளியேறினார். நேற்று முதல் நாளில் 34 ஓவர்கள் வீசியதில் இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனை விக்கெட்டாக இது அமைந்தது. இத்தோடு ரவிச்சந்திரன் அஸ்வினுக்கே ரிஷப் பண்ட் ஐடியா கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -