தரம்சாலா பறந்த ரிங்கு சிங்.. உறுதியான வாய்ப்பு.. இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

0
714
Rinku

தற்போது இந்திய அணி உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மூன்றுக்கு ஒன்று என இந்திய அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேச மாநிலத்தின் தரம்சாலா மைதானத்தில் நாளை மறுநாள் துவங்கி மார்ச் 11ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணியினர் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தைச் சென்றடைந்து இருக்கிறார்கள். மேலும் நேற்று திங்கட்கிழமை இந்திய அணியினருக்கு ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே வீரர்கள் யாரும் பயிற்சிக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் இந்திய அணியின் ஓய்வு நாளில் டெஸ்ட் அணியில் இடம்பெறாத இந்திய வெள்ளைப்பந்து அணி வீரர் ரிங்கு சிங் தரம்சாலா சென்று இந்திய அணியுடன் இணைந்து இருக்கிறார்.

இதன் காரணமாக ஐந்தாவது டெஸ்டில் ரிங்கு சிங் அறிமுகம் செய்யப்படுவாரா? என்பது போன்ற எதிர்பார்ப்புகள் நிலைவி வருகிறது. ஆனால் ரிங்கு சிங் இதைவிட பெரிய வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காகவே தரம்சாலா சென்று இருக்கிறார்.

- Advertisement -

நேற்று இந்திய அணியின் ஓய்வு நாளில் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ள வீரர்களுக்கு போட்டோ சூட் நடைபெற்றது. இந்த போட்டோ சூட்டில் பங்கேற்பதற்குதான் ரிங்கு சிங் தரம்சாலா சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஏறக்குறைய டி20 உலக கோப்பை இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பெறுவது தற்பொழுது உறுதியாகி இருக்கிறது என்று கூறலாம். பினிஷராக ஆட்டத்தின் சூழ்நிலையைப் புரிந்து அவர் காட்டும் முதிர்ச்சி இந்திய கிரிக்கெட் தாண்டி பலரைக் கவர்ந்திருக்கிறது.

இதையும் படிங்க : “கோச் செய்ற வேலையா இது? கேப்டனையும் டீமையும் பஸ்க்கு அடியில் தள்ளிட்டிங்க” – தினேஷ் கார்த்திக் கண்டனம்

எனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என இரண்டு வீரர்கள் பேட்டிங் யூனிட்டில் எதிர்பாராத விதமாக உள்ளே கொண்டுவரப்பட்டிருந்தாலும், இதனால் ஃபினிஷர் ஆக பேட்டிங் யூனிட்டில் ரிங்கு சிங் இடம் பாதுகாப்பாகவே இருக்கிறது. தற்பொழுது இந்த செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது!