தற்போது விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாகவும், அதற்குப் பின்னணியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இருப்பதாகவும் புதிய செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து இன்று விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற விரும்புவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
வீரர்களிடம் தெரிவித்த கோலி
விராட் கோலிக்கு கடைசியாக இந்திய அணி விளையாடிய ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணம் சிறப்பாக அமையவில்லை. ஒரே முறையில் தொடர்ந்து ஆட்டம் இழந்தது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக அவர் தனது சக வீரர்களிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஓய்வு பெற போவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் இந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பாத மனநிலையில் இருப்பதாகவும், ஆனால் அவரிடம் இந்த முடிவை மறு பரிசீலனை செய்யும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டிருப்பதாகவும் உறுதியான செய்திகள் தெரிவிக்கிறது.
கம்பீர் செய்யும் பிரச்சனை
விராட் கோலி ஒரு கட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தான் இருப்பதற்கு விருப்பம் தெரிவித்தார் எனவும், ஆனால் கம்பீர் இடைக்கால தீர்வு எதையும் விரும்பவில்லை என்றும், நீண்ட காலத்திற்கு செயல்படக்கூடிய ஒரு கேப்டனை விரும்புவதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : இப்ப உண்மைய சொல்றன்.. ரிஷப் பண்ட் பேட்டிங் மோசமானதுக்கு காரணம் இதுதான்.. பையன் பாவம் – சஞ்சய் பாங்கர் பேச்சு
இதன் காரணமாக விராட் கோலி ஒட்டுமொத்தமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்து விட்டார் என்று தெரிகிறது. இந்த நிலையில் அனுபவ வீரர் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால், இங்கிலாந்து தொடருக்கு விராட் கோலியின் அனுபவம் தேவைப்படுகின்ற காரணத்தினால், இந்திய கிரிக்கெட் வாரியம் அவரது ஓய்வு முடிவை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டு இருப்பதாக தெரிகிறது. விராட் கோலி என்ன முடிவு செய்கிறார் என்று இந்த வாரத்தில் தெரிந்து விடும்.