லாரா பேசியும்.. பிடிவாதம் பிடிக்கும் விராட் கோலி.. ஓய்வு முடிவை வாபஸ் வாங்குவாரா?.. வெளியான தகவல்கள்

0
197
Virat

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தன்னுடைய முடிவில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருவதாக பிசிசிஐ தரப்பில் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இந்த ஆண்டு அடுத்த மாதம் ஜூன் இருபதாம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்துவிட்ட காரணத்தினால், தற்போது பேட்டிங் யூனிட்டுக்கு அனுபவ வீரர் தேவைப்படுகிறார். இந்த நிலையில் தான் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பிடிவாதமாக இருக்கிறார்.

- Advertisement -

லாரா பேச்சுவார்த்தை

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் பல வீரர்கள் தொடர்ந்து விராட் கோலிக்கு தங்களது வேண்டுகோளை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் அம்பதி ராயுடு விராட் கோலி தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் எனவும், அவர் விளையாடும் போதுதான் டெஸ்ட் கிரிக்கெட் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் உருக்கமான முறையில் வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கரீபியன் லெஜன்ட் பிரையன் லாரா வரையில் விராட் கோலிக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறக்கூடாது என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் ஆரம்பத்திலிருந்து விராட் கோலி இடம் இது சம்பந்தமாக பேசி வருகிறது. இருந்த போதிலும் விராட் கோலி தான் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

வெளியான முக்கிய செய்தி

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் கசிந்த செய்தியில் “டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை தேர்வுக் குழுவிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக விராட் கோலி தெரிவித்திருந்தார். அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் படி வற்புறுத்தினர். ஆனால் அவர் தன்னுடைய முடிவில் தற்போது வரையில் உறுதியாக இருந்து வருகிறார். இறுதி முடிவு அடுத்த வாரம் தேர்வுக்குழு கூட்டம் கூடும் போது எடுக்கப்படும்” என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : கோச் டிராவிட்டை விட.. கேப்டனா இருந்தப்போ அவர் எனக்கு செஞ்ச விஷயம் வாழ்நாளில் மறக்க முடியாது – ரோஹித் சர்மா நெகிழ்ச்சி

விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கேட்டதாகவும், ஆனால் கேப்டன் பொறுப்புக்கு தற்காலிகமாக யாரையும் கொண்டு வரக்கூடாது எனவும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிரந்தரமான கேப்டனை உருவாக்க வேண்டும் என பயிற்சியாளர் கம்பீர் கூறிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. இதன் காரணமாகவே விராட் கோலி ஓய்வு பெறும் முடிவுக்கு வந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -