அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் எந்த இடத்தில் இந்த வருடம் எந்த மாதத்தில் நடைபெறும்? என்பது குறித்து புதிய செய்திகள் வெளியாகி இருக்கிறது.
கடந்த மாதத்தில் ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தியது. இதில் ஐபிஎல் உரிமையாளர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை முன் வைத்தார்கள். குறிப்பாக எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்? ஐபிஎல் மெகா ஏலம் தேவையா? என்பது குறித்து நிறைய விவாதங்கள் சென்றதாக கூறப்பட்டது.
கொல்கத்தா – ஹைதராபாத்
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் மெகா ஏலம் கூடாது மினி ஏலம் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.
அதே சமயத்தில் டெல்லி அணியின் உரிமையாளர் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும் என்றும், ஐபிஎல் மெகா ஏலத்தின் மூலமாகவே அணிகளுக்கு இடையேயான சமநிலை உருவாக்கப்படுகிறது எனவும், எனவே மிகா ஏலம் தொடர வேண்டும் எனவும் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
ஜெய் ஷா அறிவிப்பு
இந்த நிலையில் ஐபிஎல் உரிமையாளர்கள் நடைபெற்ற கூட்டத்தில் கூடிய அனைத்து கருத்துகளும் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த கருத்துக்களை ஐபிஎல் உயர்மட்ட குழுவுக்கு அனுப்பும் எனவும் உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் இந்த ஆண்டு எந்த மாதத்தில் எங்கு நடைபெறும்? என்பது குறித்து புதிய செய்தி வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க : கம்பீர் இந்த விஷயத்துல பயிற்சியாளரா கில்லாடி.. எங்ககிட்ட அவர் இத செய்யறதில்ல – சூரியகுமார் யாதவ் பேட்டி
இது குறித்து வெளியாகி இருக்கும் செய்தியில் 2025 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடருக்கான மெகா ஏலம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறலாம் எனவும், நடைபெறும் இடம் லண்டனாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது. மெகா ஏலத்தை முன்கூட்டியே நடத்தி முடிப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மிகவும் முக்கியம் என்பதால் இந்த தகவல் அதிகப்படியாக உண்மையாக மாறவே வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.