இரானி கோப்பை.. இந்திய அணியிலிருந்து அனுப்பப்படும் முக்கிய வீரர்.. 2வது பங்களாதேஷ் டெஸ்ட் முன் பிசிசிஐ முடிவு

0
200
Gautam gambhir and Team india

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த இரண்டு அணிகளுக்கு இடையே இரண்டாவது போட்டி வருகிற 27ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முக்கிய வீரர் ஒருவரை இந்தியாவின் உள்நாட்டு தொடரான இராணி கோபையில் விளையாட விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில் அதற்கு பிறகு தற்போது பல மாதங்கள் கழித்து மீண்டும் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டி வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்த சர்ப்ராஸ்கான் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்தும் விளையாடும் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. முன்னணி வீரர்கள் இந்த தொடருக்கு திரும்பியதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

எனவே அவரை வருகிற அக்டோபர் மாதம் முதல் தேதியில் நடைபெற உள்ள இராணி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக வீரர்களின் உடல் தகுதியில் அக்கறை காட்டுவது அவசியம். விளையாடும் வீரர்களில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் மீண்டும் பிளேயிங் லெவனில் சர்பராஸ் கான் மீண்டும் இடம் பிடிக்கக் கூடும்.

இதனால் போட்டி தொடங்கும் வரை அவர் கான்பூரில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இதுவரை 50 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ் கான் 4183 ரன்கள் குவித்திருக்கிறார். அக்டோபர் முதல் தேதியில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் சப்ராஸ்கான் மும்பை அணிக்காக விளையாட உள்ளார்.

இதையும் படிங்க:இந்தியா அசால்டா இருக்காதீங்க.. போன 2 தடவை மாதிரி இல்ல.. இப்போ அவங்ககிட்ட இது இருக்கு – தினேஷ் கார்த்திக் பேட்டி

சர்ஃபராஸ், அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற தரமான வீரர்களை கொண்ட மும்பை அணி அடங்கி இருக்கிறது. மேலும் இந்த போட்டியில் மும்பை அணிக்காக இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் சேர்க்கப்படுகிறாரா? இல்லையா? என்பது இறுதியில்தான் தெரியவரும்.

- Advertisement -