இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி இந்த இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்தத் தொடரில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி கடந்த இரண்டு முறை வெற்றி பெற்றது போல, இந்த முறை வெற்றி பெறுவதற்கு ஆஸ்திரேலியா அவ்வளவு எளிதாக இருக்காது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
கடந்த இரண்டு முறையும் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த போது பேட்டிங்கில் வலுவாக திகழ்ந்தாலும் பந்துவீச்சில் மிகவும் வலுவானதாக தங்களது செயல் திறனை வெளிக்காட்டியது. அதன் விளைவாக கடைசியாக நடைபெற்ற தொடரில் விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அப்போது தோல்வி அடைந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் இதே இந்திய அணியை எதிர்கொண்டு வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. எனவே முந்தைய இரண்டு தொடர்களைப் போல இந்த தொடர் இந்திய அணிக்கு அவ்வளவு எளிதாக இருக்காது எனவும், இருப்பினும் இந்திய அணியின் சிறப்பான செயல்திறனால் இந்த தொடர் கடுமையானதாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது “என்னால் சரியான ஸ்கோர் வரிசையை சொல்ல முடியாது, ஆனால் இந்த முறை ஆஸ்திரலியா அணியின் கைகள் மேலே இருக்கும் என்று நினைக்கிறேன். மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியக் கரையில் பவுன்ஸ் ஆடுகளத்தில் அவர்களை வீழ்த்துவது அவ்வளவு எளிதாக இருக்காது. இது இந்தியாவுக்கு எளிதான பணி இல்லை. ஆனால் மூன்றாவது முறையாக இந்திய அணி வீழ்த்தினால், இந்தியா செய்த மிகப்பெரிய விஷயங்களில் இது ஒன்றாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
நிச்சயமாக பார்டர்க்கு பாஸ்கர் டிராபி இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும். அவர்கள் பார்மில் இருக்கும் ஆஸ்திரலியா அணியை தற்போது எதிர்கொள்ள உள்ளனர். கடந்த முறை ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்றது தற்செயலானது அல்ல. அவர்கள் உள்நாட்டில் மிகச் சிறந்த அணி. ஆனால் நமது அணியை பற்றி தெரியும். நமது வீரர்களிடம் இருக்கும் துணிச்சல், நெகழ்ச்சி மற்றும் உறுதிப்பாடு ஆகியவை பார்க்க அற்புதமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:வெறும் 118 ரன்.. தினேஷ் கார்த்திக் மாஸ் கேப்டன்சி.. தவானின் அரைசதம் வீண்.. லெஜண்ட்ஸ் கிரிக்கெட் 2024
எனவே இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான தொடர் கடும் சவால் நிறைந்த போட்டி தொடராக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.