பங்களாதேஷ் டி20.. கில் ஜெய்ஸ்வால் ருதுராஜ் இல்லை.. ஓபனர்கள் யார்? கம்பீர் அதிரடி முடிவு.. முழு அலசல்

0
3422
Gambhir

நாளை மறுநாள் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி குவாலியரில் ஆரம்பிக்க இருக்கிறது. தற்போது இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களாக யார் வருவார்கள்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி துவங்குகிறது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 9 மற்றும் 12ம் தேதிகளில் மற்ற இரண்டு டி20 போட்டிகளும் நடைபெறுகிறது.

- Advertisement -

கில் ஜெய்ஸ்வாலுக்கு ஓய்வு

இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கின்ற காரணத்தினால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடர்களுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்பொழுது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 15 பேர் கொண்ட அணியில் அபிஷேக் ஷர்மா ஒரு துவக்க ஆட்டக்காரராக இருக்கிறார். தற்பொழுது துவக்க இடத்திற்கு கம்பீர் யாரை முடிவு செய்து வைத்திருக்கிறார்? என்பது ஆவலை தூண்டக்கூடிய கேள்வியாக இருந்து வருகிறது.

- Advertisement -

சொன்னதை செய்யும் கம்பீர்

இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் சர்மா உடன் வலதுகை பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை துவக்க ஆட்டக்காரராக கம்பீர் களம் இறக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. சஞ்சு சாம்சன் கடைசியாக அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் துவக்க ஆட்டக்காரராக ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி இருந்தார்.

இதையும் படிங்க : எங்க பாபர் அசாம் ஒன்னுமில்ல.. இந்தியாவின் இந்த 2 வீரர்கள் ஆடறத பார்த்துகிட்டே இருக்கலாம் – முடாசர் நாசர் பேட்டி

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு கம்பீர் வருவதற்கு முன்னால் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு தரவில்லை என்றால் அது இந்திய அணிக்குத்தான் இழப்பு சஞ்சு சாம்சனுக்கு இல்லை என்று ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார். தற்பொழுது அவர் சொன்னதை செய்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -