எங்க பாபர் அசாம் ஒன்னுமில்ல.. இந்தியாவின் இந்த 2 வீரர்கள் ஆடறத பார்த்துகிட்டே இருக்கலாம் – முடாசர் நாசர் பேட்டி

0
1795
Virat

பாகிஸ்தான் முன்னாள் வீரர் முடாசர் நாசர் பெரிய சாதனைகளை செய்திருக்கும் விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிடக்கூடாது என மிகவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு முதல் பாபர் அசாமை விராட் கோலி உடன் ஒப்பிட்டு உலக கிரிக்கெட்டில் பேசி வந்தார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானைசேர்ந்த முன்னாள் வீரர்களே விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிடுவது சரியானது கிடையாது என பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாபர் அசாமுக்கு இரண்டாவது முறையாக சோகம்

சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் வெள்ளை பந்து அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகிக் கொண்டார். 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு அவர் மூன்று வடிவ பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். இப்படியான சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முடாசர் நாசர் பாபர் அசாம் செய்ய வேண்டியவைகள் நிறைய இருக்கிறது எனவும், தன்னை ஏற்கனவே நிரூபித்து விட்ட விராட் கோலி உடன் அவரை ஒப்பிட கூடாது எனவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஒரு வித்தியாசம் இருக்கிறது

இது குறித்து முடாசர் நாசர் கூறும் பொழுது “விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இடையே ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. விராட் கோலி இந்த விளையாட்டை அலங்கரித்த சிறப்பு வீரர்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் பாபர் அசாம் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. எனவே இருவரையும் ஒப்பிடுவது சரியானதாக இருக்காது”

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய டெஸ்ட் சீரிஸ்.. இந்த 27 வயது புதிய இந்திய வீரர் விமானத்தில் இருப்பார் – தினேஷ் கார்த்திக் உறுதி

“விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடுவதை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் இருவரும் உச்சத்தில் இருந்து விளையாடும் பொழுது, நன்றாகவும் விளையாடும் பொழுது அவர்களைப் பார்ப்பதற்கே அருமையாக இருக்கும். அப்படியான நேரத்தில் மணிக்கணக்கில் டிவி முன் அமர்ந்து இவர்கள் விளையாடுவதை பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -