116% அதிகரித்த ஐபிஎல் வருமானம்.. கோடிகளில் புரளும் பிசிசிஐ.. 2023 சீசன் வருமானம் எவ்வளவு தெரியுமா?

0
33
BCCI

தற்போது உலக கிரிக்கெட்டில் வருமானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அருகில் எந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும் கிடையாது. இதற்கு மிக முக்கிய காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் உருவாக்கும் வருமானம் அமைந்திருக்கிறது.

தற்போது கிரிக்கெட்டின் முக்கிய நாடுகள் அனைத்துமே தங்களுக்கென தனியாக டி20 லீக்குகள் நடத்துகின்றன. இதில் வருமானம் மட்டும் இல்லாமல் வசதி, தரம் மற்றும் பாதுகாப்பு, சம்பளம் என இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் உச்ச நிலையில் இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் எந்த அளவில் உச்ச நிலையில் இருக்கிறது என்றால், இரண்டாவது இடத்தில் இருப்பதாக கூறப்படும் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் மற்றும் ஐபிஎல் தொடருக்கும் இடையே ஆன இடைவெளி பல மடங்கு பெரியதாக இருக்கிறது. அதாவது எந்த காலத்திலுமே இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரின் வருமானத்திற்கு கால்வாசி அளவில் கூட யாராலும் வர முடியாது என்பதே உண்மை.

2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமை மற்றும் ஸ்பான்சர் உரிமைகளை விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த ஐந்து ஆண்டுகளில் கிடைக்கும் வருமானம் மட்டுமே 48,390 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இதில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருக்கும் டிஸ்னி ஹாட் ஸ்டார் 23 ஆயிரத்து 575 கோடி ரூபாய், வியாகாம் 18க்கு சொந்தமான ஜியோ சினிமா ஆன்லைன் ஒளிபரப்பு உரிமைக்கு 23 ஆயிரத்து 758 கோடி ரூபாய், ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் உரிமைக்கு 5 ஆண்டுக்கு டாட்டா சன்ஸ் நிறுவனம் கொடுக்கும் 2500 கோடி ரூபாய், மேலும் மை சர்கிள் 11, ரூபே, ஏஞ்சல் ஒன், சியட் போன்ற ஸ்பான்சர்கள் மூலமாக கிடைக்கும் 1458 கோடி ரூபாய் என ஐந்து ஆண்டுகளில் பிசிசிஐக்கு வருமானம் கிடைக்க இருக்கிறது.

இதையும் படிங்க : பும்ரா தயவுசெய்து.. பாபர் அசாம் பாக் கிரிக்கெட்ல செய்யறத செய்யாதிங்க.. உங்க லெவல் வேற – பசித் அலி வேண்டுகோள்

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஐபிஎல் மூலமாக ஆண்டு வருமானம் 2367 கோடி ரூபாயிலிருந்து 5120 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இது 2022 ஆம் ஆண்டில் இருந்து 116 சதவீதம் 2023 ஆம் ஆண்டு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி கிரிக்கெட் இருக்கும் காலம் வரையில் இந்தியாவின் கிரிக்கெட் சந்தையை மீறி யாரும் முந்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -