நான் பும்ரா என்கிட்ட வேணாம்.. இணைந்த 6.4 அடி பவுலர்.. பயிற்சியில் விராட்டுக்கு நடந்த சம்பவம்

0
494
Bumrah

இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராகஉள்நாட்டில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியின் பயிற்சியில் பும்ரா பந்துவீச்சில் விராட் கோலி தடுமாறியதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முகாமிட்டு இரண்டு நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

பும்ராவும் 6.4 அடி உயர பவுலரும்

இந்த நிலையில் ஒட்டுமொத்த இந்திய அணியினரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியாளர்களின் கண்காணிப்பில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக விராட் கோலி வலை பயிற்சியில் பும்ராவை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. இது அணியில் இருந்த ஒட்டு மொத்த பேரும் பார்க்க விரும்பும் சம்பவமாகவே அமைந்திருந்தது.

பும்ராவை எதிர்கொள்ளும் எல்லா பேட்ஸ்மேன்களும் தற்காப்பாக விளையாடுவது போலவே விராட் கோலியும் தடுத்து விளையாடினார். ஆனால் அவர் ஒரு பிளிக் ஷாட் விளையாடப் போக பந்தை தவறவிட்டு காலில் வாங்கினார். அப்பொழுது பும்ரா அதை எல்பி டபிள்யு என்று கொண்டாடினார். ஆனால் விராட் கோலி பந்து ஸ்டெம்ப்பை விட்டு வெளியில் சென்று விட்டதாக தெரிவித்தார். உடனே பும்ரா விளையாட்டாக டிஆர்எஸ்-க்கு சிக்னல் காட்டினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விராட் கோலி 6.4 அடி உயரமுள்ள பயிற்சிக்கு அழைக்கப்பட்டு இருக்கும் பஞ்சாப்பை சேர்ந்த குர்னூர் பிரார் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடினார். ஆரம்பத்தில் அவருடைய பவுன்சர்களுக்கு விராட் கோலியால் அட்ஜஸ்ட் ஆக முடியவில்லை. இருந்த போதிலும் சிறிது நேரத்தில் அட்ஜஸ்ட் ஆகி சிறப்பாக விளையாடினார்.

15 நிமிடத்தில் ஜடேஜா அஸ்வினுக்கு விளாசல்

இதைத்தொடர்ந்து வலையில் கடைசி 15 நிமிடம் சுழல் பந்துவீச்சாளர்களை சந்தித்தார். அப்பொழுது விராட் கோலிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் பந்து வீசினார்கள். வேகப்பந்துவீச்சாளர்களை பொறுமையாக விளையாடியது போல இவர்கள் இருவரையும் விராட் கோலி பொறுமையாக விளையாடவில்லை.

இதையும் படிங்க : டிராவிட் மேல சச்சின் கோபமா இருந்தார்.. ஆனா அதுக்கு காரணம் கங்குலிதான் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

இருவரையுமே இரண்டு முறை இறங்கி வந்து சிக்ஸருக்கு விளாசினார். பிறகு ஒரு 15 நிமிட அளவில் இருவர் பந்து வீச்சிலும் பயிற்சி செய்து விட்டு விராட் கோலி தன்னுடைய பயிற்சியை முடித்துக் கொண்டார். தற்பொழுது பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பயிற்சி மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -