பட்டிதார் மற்ற கேப்டன்கள் மாதிரி பண்ண மாட்டார்.. இந்த விஷயத்துல அவர் தனியா நிப்பாரு – ஆர்சிபி வீரர் புவனேஸ்வர் குமார்

0
70

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக தாமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணி வீரர் புவனேஸ்வர் குமார் கேப்டன் ராஜத் பட்டிதார் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பெங்களூர் அணியின் புதிய கேப்டன்

ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியை பொறுத்த வரை இந்த சீசனில் சிறப்பான அணியாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி அடைந்து புள்ளி பட்டியலில் தற்போது 3வது இடத்தில் இருக்கிறது. ஏற்கனவே 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்னும் 4 போட்டிகள் வெற்றி பெற்றாலே அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பெங்களூர் அணி வீரர்கள் தேர்விலும் சிறப்பாக செயல்பட்டு சிறந்த வீரர்களை வாங்கி அணியை கட்டமைத்துள்ளது. பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிற்கும் தரமான வீரர்களை வாங்கி இருக்கும் நிலையில் புதிய கேப்டனாக ராஜத் பட்டிதார் அற்புதமான முறையில் பெங்களூர் அணியை வழி நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் சீனியர் வீரர் புனேஸ்வரகுமார் பட்டிதாரின் கேப்டன்ஷிப்பை பாராட்டி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த குணம் அவரிடம் சிறப்பானது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கேப்டன் மிகவும் நல்லவராக இருக்கிறார். சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் எப்போதும் அமைதியாக இருப்பது தான். ஏனென்றால் ஒரு போட்டியில் ஒரு அணி தோல்வி அடைந்தால் பீதி அடைவது என்பது பொதுவான விஷயம். நாங்கள் இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளோம். ஆனால் அவர் தோல்வியடையும் சமயங்களில் ஒரே மாதிரியாக இருக்கிறார். வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் ஒரே மாதிரியான மனநிலை கொண்டவராக திகழ்கிறார். அவர் அணியில் எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறார்.

இதையும் படிங்க:எழுதி வச்சுக்கோங்க.. இது மட்டும் நடந்தா.. பாபர் அசாம் விராட் கோலியை விட பெரிய வீரராக வருவார் – கராச்சி கிங்ஸ் உரிமையாளர்

பந்து வீச்சு மாற்றங்கள், வீரர்களிடையே அவர் அணுகும் முறை சிறப்பாக இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் திட்டம் குறித்து கேட்கிறீர்கள். வித்தியாசமாக எதுவும் கிடையாது நாங்கள் எப்போதும் போலவே தயாராக இருக்கிறோம். சின்னசாமி ஆடுகளத்தில் நாங்கள் முதலில் பந்து வீசுகிறோமா அல்லது பேட்டிங் செய்கிறோமா என்று தெரியாது. முதல் சில ஓவர்கள் பார்த்துவிட்டு அதற்கு ஏற்ப செயல்படுவது சிறப்பாக இருக்கும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -