எழுதி வச்சுக்கோங்க.. இது மட்டும் நடந்தா.. பாபர் அசாம் விராட் கோலியை விட பெரிய வீரராக வருவார் – கராச்சி கிங்ஸ் உரிமையாளர்

0
45

இந்தியாவில் 18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்ற வரும் நிலையில் பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில் கராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளர் பாபர் அசாம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

மோசமான ஃபார்மில் பாபர் அசாம்

இந்திய கிரிக்கெட் அணியின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து வரும் விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் மட்டும் விளையாடி வரும் நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதற்குப் பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் நிலையில் இந்தத் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது 3வது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் இதே போன்று பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதில் பிசாவார் சால்மி அணிக்காக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளையாடி வருகிறார். விராட் கோலி மற்றும் பாபர் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு ஒப்பீடு இருக்கும் நிலையில் சமீபத்தில் பாபர் அசாம் பேட்டிங் ஃபார்ம் பெரிய பிரச்சனைக்கு உள்ளாகி வருகிறது.

- Advertisement -

கோலியை விட பெரிய ஆளா வருவார்

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவ தொடரிலும் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வரும் பாபர் அசாம் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரிலும் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு ரன் மட்டுமே எடுத்துள்ள நிலையில் கராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளர் பாபர் அசாம் திரும்பவும் ஃபார்முக்கு வரும்போது பெரிய ஆளாக வருவார் என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:CSK vs MI.. சிஎஸ்கே உத்தேச பிளேயிங் XI.. 3 மாற்றம்.. மும்பைக்கு தண்ணி காட்டலாம்.. முழு அலசல்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” பாபர் அசாம் மீண்டும் அனைத்து விஷயங்களும் சரியாக அமைந்து தனது பேட்டிங் பார்முக்கு திரும்பும் போது விராட் கோலி உட்பட உலகின் வேறு எந்த வீரையும் விட மிகச் சிறந்த வீரராக வருவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர் கேரி சோபர்ஸ் மற்றும் சர் விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற பெரிய ஜாம்பவான்களின் பெயர்களோடு பொருந்தக்கூடிய அளவுக்கு சிறப்பாக இருப்பார்” என்று கராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளர் சல்மான் இக்பால் கூறியிருக்கிறார்.

- Advertisement -