இந்திய மற்றும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஓய்வு குறித்தும் மேலும் இந்திய அணியின் தற்போது யார் மதிப்பு வாய்ந்த வீரர்? என்பது குறித்தும் வெளிப்படையாக கருத்து கூறியிருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய ஓய்வு குறித்து கூறும் பொழுது விரும்பியபடி எப்பொழுது விளையாட முடியவில்லை என்று தோன்றுகிறதோ அப்பொழுது உடனே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஓய்வு பெறுவதற்கான எந்த இலக்குகளையும் வைத்துக் கொள்ளவில்லை என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
104 விக்கெட் காத்திருக்கும் வரலாற்று சாதனை
தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 37 வயதாகிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை ஐசிசி பட்டியலில் அவர் தற்போது முதல் இடத்தில் இருந்து வருகிறார். மேலும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 516 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சு இப்பொழுது வரையிலும் தனித்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் மேற்கொண்டு 104 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றும் பொழுது, ஒட்டுமொத்தமாக 620 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கின்ற வரலாற்று சாதனையை படைத்தார். தற்பொழுது அ அனில் கும்ப்ளே 619 சர்வதேச டெஸ்ட் விக்கெட் கைப்பற்றி இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருக்கிறார்.
இந்திய அணியின் மதிப்பு மிக்க வீரர்
ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய அணியின் தற்போதைய மதிப்புமிக்க வீரர் யார் என்று கூறும்பொழுது “இந்தியா எப்பொழுதும் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிகம் செலுத்தும் நாடாகவே இருந்து வருகிறது இது எப்பொழுதும் மாறும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நான் பும்ராவை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அவர் ஒரு தலைமுறையின் பந்துவீச்சாளர். அவரை இன்னும் கொண்டாட வேண்டும்.
இதையும் படிங்க : 63 வருட வரலாறு.. ருதுராஜ் அணிக்காக மும்பை வீரர் சாதனை.. ஈஸ்வரன் தனியாளாக போராட்டம்.. துலீப் ட்ராபி 2024
சென்னைவாசிகளான நாங்கள் பந்துவீச்சாளர்களை மிகவும் பாராட்டக் கூடியவர்களாக இருக்கிறோம். கடந்த நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக பும்ரா சென்னைக்கு ஒரு நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக வந்திருந்தார். அவருக்கு தமிழ்நாட்டில் ரஜினிக்கு கொடுக்கும் வரவேற்பை கொடுத்தோம். அவரை நாம் ஒரு சாம்பியன் ஆக நடத்த வேண்டும். நான் தனியாக பெயரிட விரும்பவில்லை, ஆனால் தற்பொழுது பும்ராதான் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.