144/6 டு 339/6.. பாஸ்பால் ஆடிய அஸ்வின் அபார சதம்.. உலகின் ஒரே வீரராக சாதனை.. ஜடேஜா சிறப்பான பேட்டிங்.. பங்களாதேஷ் அணிக்கு பதிலடி

0
2136
Ashwin

இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்த காப்பாற்றி இருக்கிறார்கள்.

இந்த போட்டிக்கான ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அவர்கள் எதிர்பார்த்தபடியே வேகப்பந்து வீச்சுக்கு ஆரம்பத்தில் நல்ல சாதகம் இருந்தது.

- Advertisement -

ஏமாற்றிய இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள்

இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியாக அமைந்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 6, சுப்மன் கில் 0, விராட் கோலி 6 ரன்களில் வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் தன் பங்குக்கு அதிரடியாக விளையாடி 39 ரன்கள் எடுத்து அவரும் வெளியேறினார்.

பொறுப்பை காட்டி விளையாடிய ஜெய்ஷ்வால் அரைத்ததம் அடித்து 118 பந்துகளில் 56 ரன்கள் உடன் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து உடனுக்குடனே கேஎல்.ராகுல் 16 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 144 ரன்கள் 6 முக்கிய விக்கட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.

- Advertisement -

இந்திய அணியை காப்பாற்றிய அஸ்வின் ஜடேஜா

இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் சூழ்நிலையை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். ஏறக்குறைய இந்த மைதானம் இருவருக்குமே சொந்த மைதானம்தான் என்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியதோடு இந்திய அணியும் காப்பாற்றினார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியின் இருவருமே அரைசதம் கடந்தார்கள். மேலும் இந்த ஜோடியில் சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஆறாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை அடித்தார். இன்று முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்திருக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் 112 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 102 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 117 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 86 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள்.

இதையும் படிங்க: இன்னும் 76 ரன்கள்.. ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் 2 மெகா சாதனைகள்.. பொறுப்பின் சிகரமான பேட்டிங்

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 227 பந்துகளில் 195 ரன்கள் அதிரடியாக பாட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இது இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்டெஸ்ட் கிரிக்கெட்டில் 30க்கும் மேற்பட்ட முறை ஐந்து விக்கெட்டுகள், இருபதுக்கும் மேற்பட்ட முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்கின்ற சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்திருக்கிறார்.

- Advertisement -