பங்களாதேஷ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார். இதற்குப் பிறகு இந்திய அணியில் தன்னுடைய வருகை எப்படி அமைந்து இருந்தது என்பது குறித்து பேசி இருக்கிறார்.
சமீபத்தில் ஆண்டுகளாகவே ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இதுவரையில் மொத்தம் ஆறு சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த சதத்தின் எண்ணிக்கையை சமன் செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
147 ஆண்டுகால வரலாறு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். தற்போது மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சதம் மற்றும் ஐந்து விக்கெட்டுகள் பங்களாதேஷ் அணிக்கு எதிராக கைப்பற்றி இருக்கிறார்.
147 ஆண்டுகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் ஒரே மைதானத்தில் இரண்டு முறை ஐந்து விக்கெட் மற்றும் சதத்தை எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் காலத்தால் அழியாத சாதனையை அதுவும் தன்னுடைய சொந்த மண்ணில் படைத்திருக்கிறார்.
ஹர்பஜன் சிங் இடத்திற்கு சந்தேகப்பட்டார்கள்
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “என் தந்தை இப்பொழுது மிகவும் இலகுவாகிவிட்டார். இப்பொழுது எல்லாம் நான் வீட்டில் இருப்பதை அவர் விரும்புகிறார். ஆனால் முன்பு என்னை வீட்டில் இருந்து வெளியே சென்று எப்பொழுதும் விளையாடும் படி வலியுறுத்துவார்”
“இப்பொழுது வீட்டில் இருந்தால் என்னை மிகவும் அன்புடன் கட்டித் தழுவுகிறார்.நான் இப்பொழுது விளையாட்டை ரசித்து விளையாடுகிறேன். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் விளையாடுவதற்கான காரணங்கள் மாறிவிட்டது. இதில் என் மனைவியின் தாக்கம் அதிகம்.
இதையும் படிங்க : தோனியை விட நான் சிறந்தவன் கிடையாதுனு சொல்லாத ரிஷப் பண்ட்.. வித்தியாசமான பதில்.. ரசிகர்கள் ஆச்சரியம்
“இந்த டெஸ்ட் போட்டியில் நான் என்ன மாதிரி தாக்கம் செலுத்தி இருக்கிறேன் என்று என்னால் கருத்து கூற முடியாது. நான் இந்திய கிரிக்கெட்டுக்கு வரும் பொழுது ஹர்பஜன் சிங் மாதிரியான பெரிய ஒரு வீரரின் இடத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இருந்தது.ஜூனியர் கிரிக்கெட்டில் அவருடைய அதிரடியை நான் பின்பற்றினேன். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் அவருடைய இடத்தை நான் நிரப்ப முடியுமா? என மக்கள் சந்தேகப்பட்டார்கள். அந்த சமயத்தில் எனக்கு நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.