தற்போதைய கிரிக்கெட்டில் உலகின் சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களில் இருவரை விட்டு விட்டு மற்ற இருவரில் யார் சிறந்தவர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார். இதில் அவர் விராட் கோலி மற்றும் ஜோரூட்டை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான்கு சிறந்த பேட்ஸ்மேன்களை கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் வரையறுப்பார்கள். இந்த காலகட்டத்தில் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் விராட் கோலி ஆகிய நான்கு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.
கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்
உலகின் தற்போதைய சிறந்த நான்கு பேட்ஸ் பெண்களின் ரவிச்சந்திரன் அஸ்வின் வில்லியம்சன் மற்றும் ஸ்மித் இருவரையும் நால்வரில் யார் சிறந்தவர் என்பதில் எடுத்துக் கொள்ளவில்லை. இவர்கள் திறமையானவர்களாக இருந்த போதிலும் கூட, போட்டிக்குள் வரவில்லை என்று கூறிவிட்டார்.
அதே சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் கேன் வில்லியம்சன் பற்றி பேசும் பொழுது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதையும் மறந்து விடக்கூடாது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அடுத்த இரண்டு பெரிய வீரர்களான ஜோ ரூட் மற்றும் விராட் கோலி இருவரையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஜோ ரூட்டா? விராட் கோலியா?
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” நான் முதல் நான்கு பேட்ஸ்மேன்களில் இருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் ஜோ ரூட் மற்றும் விராட் கோலி இருவரையும் தேர்வு செய்வேன். ஆனால் இருவருக்கும் எந்த ரேங்க்கும் கொடுக்காமல் சமமாக வைப்பேன்.வில்லியம்சன் மற்றும் ஸ்மித் இவர்கள் இருவரையும் விட பின் தங்கியிருக்கிறார்கள். வில்லியம்சன் காயங்களால் விளையாட முடியாமல் தடுக்கப்பட்டார் என்பதை மறந்து விடக்கூடாது.
இதையும் படிங்க : கம்பீர் ஒதுக்கட்டும்.. ஆனா எங்களுக்கு தேவை.. நியூசிலாந்து இந்திய கோச்சை தட்டி தூக்கியது – வெளியான தகவல்கள்
பேட்மன்களுக்கு முழங்கை பிரச்சனை என்பது எப்பொழுதும் இருக்கக்கூடியது. இதன் காரணமாக ஸ்மித்துக்கு கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டு அவர் தன்னுடைய நிலையில் இருந்து சரிந்து இருக்கிறார். இது போலவே கேன் வில்லியம்சனுக்கும் காயங்கள் இருந்திருக்கிறது.அதே சமயத்தில் இவர்கள் இருவரும் திரும்பி வந்து பழைய நிலையில் சிறப்பாக விளையாடினால், அதற்காக நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.