ரிஷப் பண்ட் ஃபார்முலாதான் சரி.. ஜடேஜா அந்த விஷயத்தை சொல்லி ஹெல்ப் பண்ணினார் – சதம் அடித்த அஸ்வின் பேட்டி

0
1198
Ashwin

இன்று தொடங்கிய பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தடுமாறிய இந்திய அணியை பேட்டிங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து கரை சேர்த்திருக்கிறார்கள். இன்று சிறப்பாக விளையாடி சதம் அடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய பேட்டிங் குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

இந்த போட்டியின் ஆடுகளம் மற்றும் கண்டிஷன்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க இந்திய அணி 144 ரன்கள் எடுத்திருந்த பொழுது முக்கிய ஆறு நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்துவிட்டது. இப்படியான நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து ஆட்டம் இழக்காமல் இருந்து அணியை காப்பாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

கரை சேர்த்த மெகா பார்ட்னர்ஷிப்

இந்திய அணி நெருக்கடியான சூழ்நிலையில் இருந்த பொழுது ஜோடி சேர்ந்த இருவரும் அணிக்கு ரன்களை கொண்டு வந்ததோடு அதிரடியாகவும் விளையாடினார்கள். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க, இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஆறாவது சர்வதேச டெஸ்ட் சதத்தை அடித்து அசத்தினார்.

இன்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 339 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் 112 பந்துகளில் 102 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 117 பந்தில் 86 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரிஷப் பண்ட் பாணிதான் சரியானது

இன்று சதம் அடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இங்கு சதம் அடிப்பது எப்பொழுதும் சிறப்பு வாய்ந்தது. கடந்த மாதிரி நான் இங்கு சதம் அடித்த என்னை பேட்டி எடுக்கும் ரவி பாய் நீங்கள்தான் பயிற்சியாளராக இருந்தீர்கள். நான் கடைசியாக ஒரு டி20 தொடரில் இருந்து வந்தாலும் கூட எப்பொழுதும் பந்து வீசி வருகிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் ரிஷப் பண்ட் போல விளையாடுவது சரியானதாக இருக்கும்”

“இந்த விக்கெட் நல்ல பவுன்ஸ் மற்றும் கேரி இருக்கக்கூடியது. இது பழைய சென்னை சேப்பாக்கம் விக்கெட் போலவே இருக்கிறது. பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் வெளியில் வீசும் போது நாம் யோசிக்காமல் அடித்து விளையாடலாம். நான் இந்த போட்டியில் களைப்பாக இருந்த நேரத்தில் ஜடேஜா எனக்கு நல்ல முறையில் உதவியாக இருந்தார்.

இதையும் படிங்க : 144/6 டு 339/6.. பாஸ்பால் ஆடிய அஸ்வின் அபார சதம்.. உலகின் ஒரே வீரராக சாதனை.. ஜடேஜா சிறப்பான பேட்டிங்.. பங்களாதேஷ் அணிக்கு பதிலடி

“ஜடேஜா திடமானவர் மற்றும் சில வருடங்களாக தொடர்ந்து இந்திய அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன் ஆகவும் இருந்து வருகிறார். நான் கொஞ்சம் களைப்பாவதை உணர்ந்து அவர் என்னிடம் வந்து ‘ இனி 2 ரன்களை 3 ரன்கள் ஆக மாற்றி ஓடியெடுக்க வேண்டாம்’ என்று கூறினார். இது எனக்கு உதவியது. இங்கு ஓவர் ஸ்பின் வீசினால் நல்ல பவுன்ஸ் கிடைக்கும். போட்டியில் கொஞ்சம் தாமதமாக ஸ்பின்னர்கள் உள்ளே வருவார்கள். நாளை புதிய பந்தில் கொஞ்சம் பார்த்து புதிதாக ஆரம்பித்து விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -