நான் பந்து வீசியதில்.. இந்த தமிழ்நாட்டு பையன் ஸ்பின் ஆடறதுல சிறப்பான பேட்ஸ்மேன் – அஸ்வின் பாராட்டு

0
613
Ashwin

இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபி அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்குகிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து ஆறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் பந்து வீசியதில் ஒரு குறிப்பிட்ட தமிழக வீரர் சுழல் பந்துவீச்சை விளையாடுவதில் மிகவும் சிறந்தவர் என்று கூறி இருக்கிறார்.

இந்த ஆண்டு துவங்க இருக்கும் துலீப் டிராபிக்கு தமிழகத்திலிருந்து சாய் சுதர்சன், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், பாபா இந்திரஜித், சந்தீப் வாரியர் மற்றும் நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

நேற்று இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கிரிக்கெட் அனலைசர் பிரசன்னா இருவரும் கலந்து கொண்டு விவாதித்தார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜன் மற்றும் பிரதோஷ் ரஞ்சன்பால் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமா? என்பது குறித்தும் பேசப்பட்டது.

இந்த நிலையில் பாபா இந்திரஜித் குறித்து பேசிய பிரசன்னா கூறும் பொழுது “தற்போது இந்தியாவில் சுழல் பந்து வீச்சை சிறப்பாக விளையாடும் மூன்று பேரை எடுத்துக் கொண்டால் அதில் ஒருவராக பாபா இந்திரஜித் இருப்பார். அவர் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்த ஒருவராக இருந்தும் கூட அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை” என்று கூறினார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “தமிழக அணி ரஞ்சித் தொடர்களில் அதிக முறை நாக் அவுட் சுற்றுகளுக்கு முன்னேற முடியாமல் போன காரணத்தினால் பாபா இந்திரஜித் பேட்டிங் குறித்து கவனம் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் அவர் குறித்து யாரும் அதிகம் பேசவில்லை. கடந்த முறை தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற காரணத்தினால் அவர் 700 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தார்.

அதே சமயத்தில் நான் பந்து வீசியதில் சுழல் பந்து வீச்சை விளையாடுவதில் பாபா இந்திரஜித் மிகவும் சிறப்பான ஒரு பேட்ஸ்மேன். அவர் பந்தை மிகவும் அருமையாக கணித்து விளையாடி ஆட்டத்தை அழகாக எடுத்துச் சென்று விடுவார்.

இதையும் படிங்க : 16 வருடம்.. விராட் கோலியின் அந்த விஷயங்களை சந்தையில் வாங்க முடியாது – ரோகித் சர்மா பாராட்டு

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு ஆண்டில் உள்நாட்டுத் தொடரில் அனைத்து தொடர்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் வந்து அடுத்த வருடம் அனைத்து தொடர்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு முன்னால் 10 பேர் இருப்பார்கள். இதுதான் பிரச்சினையாகி விடுகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -