ஆஸியில் 2வது முறை டெஸ்ட் தொடர வெல்ல நினைக்கல.. ரவி சாஸ்திரிதான் அந்த மேஜிக் செய்தார் – அஸ்வின் வெளியிட்ட தகவல்

0
261
Ashwin

இந்திய அணி இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

ரவி சாஸ்திரி பொதுவாகவே மிகவும் தைரியமான குணத்தை கொண்டவர். அதேபோல கிரிக்கெட்டில் அதிரடியான திட்டங்களை செயல் படுத்துவதில் வல்லவர். வீரர்களை எப்பொழுதும் நம்பிக்கை ஊட்டி நல்ல மனநிலையில் கொண்டு வந்து செயலாற்றக்கூடிய பயிற்சியாளராக இருந்தார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் வெற்றி

இந்திய அணி முதல்முறையாக 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இருந்த போதிலும் கூட, தொடர்ந்து இரண்டாவது முறையாக 2021 ஆம் ஆண்டு பெற்ற டெஸ்ட் வெற்றிதான் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இரண்டாவது முறை ஆஸ்திரேலியா அணியை அவர்கள் சொந்த மண்ணில் இந்திய அணி வீழ்த்திய பொழுது ஆஸ்திரேலியா அணி முழு வீரர்களுடன் முழு பலமான அணியாக இருந்தது. அதே சமயத்தில் இந்திய அணிகள் முக்கிய வீரர்கள் ஒவ்வொருவராக ஒவ்வொரு போட்டியில் வெளியேறி விட்டார்கள். கடைசியில் இளம் வீரர்கள் கொண்ட அணி காபா டெஸ்டில் வலிமை மிகுந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சரித்திர வெற்றி பெற்று சாதித்தது.

- Advertisement -

இந்த தொடரில் முதல் டெஸ்டில் 36 ரன்னுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆகி இருந்தது. அந்த டெஸ்டுடன் கேப்டன் விராட் கோலி தன் மனைவியின் பிரசவத்திற்காக இந்தியா திரும்பினார். அந்த நிலையில் ரகானே கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தினார்.

ரவி சாஸ்திரி தந்த ஊக்கம்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நாங்கள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதைப் பற்றி யோசிக்கவில்லை. ஏனென்றால் ஒட்டுமொத்த அணியின் சூழலும் குறைந்ததாக மாறிவிட்டது. ஆனால் மாலையில் ரவி பாய் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில் அவரே கரோக்கி பாடலை எங்களுக்காக பாடினார்.

நாங்கள் 36 ரன்னில் ஆல் அவுட் ஆகி இருந்தோம். மேலும் விராட் கோலி நாடு திரும்புகிறார் எனவே நேர்மறையாக இருக்க வேண்டும் எனவும் மெல்போன் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் எனவும் விரும்பினோம். நாங்கள் தொடரை வெல்வது குறித்து நினைக்கவில்லை. சிறிய இலக்குகளை வைத்துக் கொள்ள விரும்பினோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -