இந்திய அணி அடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் இருவரும் எப்படி இணைந்து செயல்படுவார்கள் என்பது குறித்தான கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்திருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர்களை அதிகம் ஆதரிக்க கூடிய அதே சமயத்தில் வீரர்களுடன் ஒருவராக இருக்கக் கூடியவர். ஆனால் கம்பீர் மிகவும் தீவிரத் தன்மை வாய்ந்தவர். மேலும் சில விஷயங்களில் அவர் மிகவும் கண்டிப்பு காட்டக் கூடியவர். இதனால் இருவருக்கும் எப்படி ஒத்துப் போகும்? என்பது கேள்வியாக இருந்து வருகிறது.
ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி
ராகுல் டிராவிட் அண்டர் இந்திய அண்டர் 19 அணி மற்றும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக மிகப்பெரிய சேவை செய்திருக்கிறார். அவருக்கு வீரர்களுடன் பழகுவது குறித்தான அணுகுமுறை மிக தெளிவாக இருந்தது. இதன் காரணமாக இந்திய அணிக்குள் வந்த பொழுது அவரால் நட்சத்திர வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுடன் சுலபமாக கலந்து கொள்ள முடிந்தது.
உதாரணமாக ராகுல் டிராவிட் இந்திய அணிக்குள் வந்ததும் இந்திய அணி வீரர்களின் ஓய்வு அறையில் எந்த மாற்றத்தையும் தனக்கு ஏற்ற வகையில் உருவாக்கவில்லை. மாறாக இந்த புதிய தலைமுறை வீரர்கள் எப்படி இருக்கிறார்களோ அதற்கு தகுந்தது போல தன்னை மாற்றிக் கொண்டார். கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் பயிற்சியாளராக வாருங்கள் என்று அழைக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையே நல்ல நட்பும் மரியாதையும் இருந்தது.
கம்பீர் – ரோகித் சர்மா கூட்டணி
இந்த நிலையில் இந்த இருவரும் எப்படி இணைந்து செயல்படுவார்கள் என்பது குறித்து பதில் அளித்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “கம்பீர் பாய் மிகவும் தீவிரத் தன்மை கொண்டவர். ரோகித் மற்றும் கம்பீர் பாய் இருவருக்கும் இடையே ஒற்றுமைகள் இருக்கிறது. ரோகித் இப்படியான விஷயங்களை இலகுவாக வைத்திருக்கிறார். ஆனால் கம்பீர் பாய் அதை தீவிரமாக வைத்திருக்கிறார். இவ்வளவுதான் வித்தியாசம்.
இதையும் படிங்க : தோனிக்கு இடம்.. ரோகித் இல்லை.. கம்பீர் வெளியிட்ட ஆல் டைம் இந்திய லெவன்.. 4 பவுலர்கள்
மேலும் கம்பீர் பாய் ராகுல் டிராவிட் ஸார் போலவே இந்திய கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆனால் இருவருமே வித்தியாசமானவர்கள். ஆமாம் இருவருமே வெவ்வேறு விதமான ஆளுமை கொண்டவர்கள். தோனி மிகவும் கூலாக இருந்தார் அனைவரும் கூலாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அது அப்படி கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. நாம் அதை ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.