ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய புத்தகம் வெளியிட்டு விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் மகேந்திர சிங் தோனியை வைத்து ஆரம்ப காலகட்டத்தில் அவர் கொண்ட இலக்கு பற்றிய சுவாரசிய தகவலை கூறியிருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் 2010ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் மகேந்திர சிங் தோனி கேப்டனாக வழிநடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனியின் நம்பிக்கையை பெற்ற காரணத்தினால், அவர் இந்திய அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் மட்டும் இல்லாமல், இந்திய கிரிக்கெட்டின் லெஜன்ட் வீரராக உருவெடுத்திருக்கிறார். இதற்குப் பின்னால் மகேந்திர சிங் தோனி உடனான நீண்ட கால உறவு தொடர்ந்து வந்து இருக்கிறது. தற்பொழுது அவர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் இது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “இது வளர்ந்து வரும் ஒரு உறவு. 2008 ஆம் ஆண்டு என்னைப் போன்ற ஒருவர் இருப்பது தோனிக்கு தெரியாது. 2009 ஆம் ஆண்டு முதல் தோனியின் விக்கெட்டை கைப்பற்றுவதை என்னுடைய இலக்காக வைத்துக் கொண்டேன். இப்படிப்பட்ட ஒருவரை வைத்து இலக்கு வைக்கும் பொழுது அது மிகவும் வீரியமிக்க ஒன்றாக இருக்கும்.
நாங்கள் அப்பொழுது சேலஞ்சர் டிராபியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நான் நம்ப முடியாத ஒரு ஸ்பெல்லை வீசினேன். தோனி என்னுடைய பந்துவீச்சை விளையாட முடியாமல் திணறினார். பிறகு இறுதிப் போட்டியில் நான் அவருடைய விக்கெட்டை கைப்பற்றினேன். அப்பொழுது அவர் என்னிடம் இருக்கும் திறமையை பார்த்தார் என்று நான் நம்புகிறேன். அங்கிருந்து எங்களுடைய உறவு முதிர்ச்சி அடைந்தது.
இதையும் படிங்க : இந்தியா கூட அந்த விஷயத்தை சரியா பண்ணினா சும்மா ஜெயிப்போம்.. மழை வந்தாலும் கவலை இல்ல – டஸ்கின் அகமத் பேட்டி
ஒரு குதிரை பந்தயத்திற்கு தயாராக இல்லை என்று தோனி நினைத்தால் அந்த குதிரைக்கு தோனி வாய்ப்பு தர மாட்டார். இது அவருடைய குணாதிசயம். அதேபோல் ஒரு குதிரை ஓடுவதற்கு தயாராகி விட்டது என்று அவர் நினைத்தால், அந்தக் குதிரைக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். எனக்கும் இப்படித்தான் வாய்ப்புகள் அவரிடம் அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.