நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தங்களின் முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அரையிறுதி வாய்ப்பில் நீடிப்பதற்கு இந்தியாவுக்கு எதிரான போட்டியை வெல்வோம் என பங்களாதேஷ் அணி வீரர் டஸ்கின் அகமத் கூறியிருக்கிறார்.
இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் இந்திய அணி வென்றால் 99% தகுதிப் பெற்றுவிடும். அதே சமயத்தில் பங்களாதேஷ் அணி வெளியேறிவிடும். ஒருவேளை பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றால், இந்தியாவை விட பங்களாதேஷ் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும். ஏனென்றால் இந்திய அணி கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், பங்களாதேஷ் அணி தங்கள் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியையும் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இன்றைய போட்டி பங்களாதேஷ் அணிக்கு மட்டும் இல்லாமல் இந்திய அணிக்கும் மிகவும் முக்கியமான போட்டி. எனவே இந்திய அணி யாருக்கும் ஓய்வு கொடுப்பது பற்றி யோசிக்காது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணியை வெல்வதற்கு பங்களாதேஷ அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டஸ்கின் அகமத் பின்வருமாறு பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “எங்களுடைய வாய்ப்புகளில் நாங்கள் நம்பிக்கை உடன் இருக்கிறோம். ஆடுகளம் சாதகமாக இருக்கிறது. ஆனால் வெற்றி எளிதில் வராது. அடுத்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பில் இருப்போம். மேலும் இந்திய அணிக்கு எதிரான போட்டி மழையின் காரணமாக நடக்கவில்லை என்றால் கூட எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும். நாங்கள் எங்களுடைய கடைசி போட்டியில் வென்று அரைஇறுதிக்கு முன்னேற முயற்சி செய்வோம்.
துரதிஷ்டவசமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தோம். ஆஸ்திரேலியா அணி ஆக்ரோஷமாக விளையாடியது. அடுத்து இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் நாங்கள் வாய்ப்புகளை மாற்றியமைக்க முடியும் என்று நம்புகிறோம்.
மறைக்க இதையும் படிங்க : மறைக்க விரும்பல.. கோலி ரன் எடுக்காதது எனக்கு பிடிக்கல.. டீம் பலமே இன்னொருத்தர்தான் – இந்திய பேட்டிங் கோச் பேட்டி
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல முறையில் செயல்பட வேண்டும். இந்த போட்டியில் தோல்வியடைந்தால் எங்கள் அரையிறுதி நம்பிக்கை சிதைந்து விடும. எனவே இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற எங்களுடைய பேட்டிங்கை கொஞ்சம் மேம்படுத்த வேண்டும். ந்துவீச்சு செயல் திறன் எங்களுக்கு நல்லதாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.