கும்ப்ளே எனக்காக அதை ஆசைப்படறாரு.. ஆனா இந்த இடத்துல கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விடுவேன் – அஸ்வின் பேச்சு

0
127
Ashwin

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய ஓய்வு எப்போது? என்பது குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தற்பொழுது 516 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அதே சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 619 விக்கெட்டுகள் கைப்பற்றி அனில் கும்ப்ளே முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் அவர் 40 வயது வரை விளையாடுவது குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது.

- Advertisement -

அப்படியெல்லாம் எதுவும் கிடையாது

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “என்னுடைய மனதில் 40 வயது வரை விளையாட வேண்டும் என்கின்ற இலக்கு எல்லாம் இல்லை. ஒரு குறிப்பிட்ட வயதானதற்குப் பிறகு ஒவ்வொரு போட்டிக்கும் அதிக முயற்சிகள் செய்ய வேண்டி இருக்கும் என்பதால், நான் ஒவ்வொரு நாளிலும் சிறப்பாக செயல்படுவதை மட்டுமே பார்க்கிறேன். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் நான் நிறைய முயற்சிகள் செய்து விட்டேன்”

“நான் தற்பொழுது ஓய்வு பெற முடிவு செய்யவில்லை. அதேபோல இதை நான் முன்னோக்கியும் கொண்டு செல்லவும் நினைக்கவில்லை. நான் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கும் நாளில் உடனடியாக வெளியேறி விடுவேன். எனக்கு என்ன நான் எந்த இலக்கையும் நிர்ணயிக்க வில்லை. ஆனால் அனில் கும்ப்ளே பாய் அவரது சாதனையை நான் உடைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் ஒரு ஜென்டில்மேன், அவருடன் சேர்ந்து நான் வேலை செய்திருக்கிறேன். ஆனால் நான் அப்படி எதுவும் இலக்கு வைக்கவில்லை”

- Advertisement -

ஓய்வு இந்த நிலையில் வரும்

மேலும் இது குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் “நான் நாள் முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். மேலும் எனது கிரிக்கெட்டை முழுமையாக அனுபவித்தும் வருகிறேன். இது என்னுடைய புதிய வாழ்க்கை என்பதால் இதைச் சொல்கிறேன். 2018 முதல் 2020 வரை நான் எப்படி இருந்தேன் என்று எனக்கு தெரியும். அதற்குப் பிறகு நான் எப்படி மாறினேன் எப்படி விளையாடுகிறேன்? என்பதும் எனக்கு தெரியும்”

இதையும் படிங்க : அடிச்சு சொல்றேன்.. கம்பீர் யார் பேச்சையுமே கேட்க மாட்டார்.. இதுதான் இனி நடக்க போகுது – அஜய் ஜடேஜா கணிப்பு

“நான் இதை அப்படியே பிடித்துக் கொள்ள விரும்புகிறேன். விளையாட்டின் மீதான காதலை எந்த ஒரு நிலையிலும் எதற்காகவும் இழக்க விரும்பவில்லை. அது எனக்காக இருக்கலாம் அல்லது எதுவாக இருக்கலாம் நான் இழக்க விரும்பவில்லை. நான் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைப்பதன் மூலமாக மகிழ்ச்சியை இழக்கிறேன் இன்று நான் உணரும் தருணம், நான் விளையாடுவதற்கு தகுதியாக இல்லை என்று உணரும் தருணம் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -